search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுமணம்"

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்கபடும்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்க உள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது. விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் அரசு 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்ப பெயரை தன்னுடன் இணைத்து கொண்டார்
    • தனது பதிலுடன் ஒரு நகைச்சுவை எமோஜியை இணைத்து பதிவிட்டார் சமந்தா

    தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.

    4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் "யே மாயா சேஸவே" (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா (Akkineni Naga Chaitanya).

    சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.

    ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் "அக்கினேனி" எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

    சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

    2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனைப்புடன் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சமந்தா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவரது அதிகாரபூர்வ கணக்கில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" (Ask Me Anything) எனும் அமர்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது ஒரு பயனர் அவரிடம், "மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?" என கேட்டார்.

    அதற்கு சமந்தா, "அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன" என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார்.

    சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2019-ம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார்.
    • மறுமணம் செய்து கொண்ட காரணத்தைக் கூறி டெல்லி ஐகோர்ட் அவருக்கு இழப்பீட்டை மறுத்தது.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார். கணவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி டெல்லி ஐகோர்ட் இழப்பீட்டை மறுத்தது.

    இதை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில் பஞ்சாப்-அரியானா நீதிமன்றம் இந்தக் கருத்தை அவருக்கு சாதகமாகக் கூறியுள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி அர்ச்சனா புரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,

    மறுமணம் செய்துகொண்டதாலேயே ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் விபத்திற்கான இழப்பீட்டுப் பணத்தை தர மறுப்பது சரியல்ல என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இறந்தவரின் விதவையான ரஜினி மறுமணம் செய்துகொண்டதால், அவரது உரிமைக் கோரிக்கையை இழக்க இது ஒரு காரணமாக இருக்கமுடியாது என்பதை கவனிக்க வேண்டும்.

    விதவையின் மறுமணத்துக்கும், அவளுக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாகவும், இழப்பீடு பெறுவதற்கான உரிமையுடன் அவளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

    அவரது கணவரின் இயற்கைக்கு மாறான மறைவின் விளைவாக மறுமணம் செய்து கொள்வதற்கான அவளது முடிவு முழுக்க முழுக்க அவளுடைய தனிப்பட்ட விருப்பம், அதை யாரும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

    மேலும், விபத்தில் இறந்தவரின் தந்தைக்கும் இழப்பீட்டில் உரிமை உள்ளது எனவும் நீதிபதி அர்ச்சனா புரி தெரிவித்தார்.

    • திருமணத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
    • ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை இருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது தவறாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுக்கூர். பிரபல வக்கீல்.

    இவரது மனைவி டாக்டர் ஷீனா. மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். முஸ்லீம் தம்பதியான இவர்கள் இருவரும் கடந்த 1994-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    முஸ்லீம் ஷரியத் சட்டப்படி இவர்களின் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முஸ்லீம் ஷரியத் சட்டப்படி சுக்கூர்-ஷீனா தம்பதியின் அனைத்து சொத்துக்களும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது. 3-ல் 2 பங்கு சொத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.

    இதற்காக சிறப்பு திருமண சட்டப்படி சுக்கூர்-ஷீனா தம்பதியினர் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி சுக்கூர் கூறியதாவது:

    முஸ்லீம் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் சொத்தில் 3-ல் 2 பங்கு மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள சொத்துக்கள் அனைத்தும் அவர்களின் சகோதரர்களுக்கு கிடைத்து விடும்.

    ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை இருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது தவறாகும். இதை என்னால் ஏற்க முடியவில்லை.

    எனவே நான் 1954-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அந்த திருமணத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

    இதன்மூலம் எங்கள் மகள்களுக்கு எங்களின் அனைத்து சொத்தும் முழுமையாக கிடைக்கும். இதற்காகவே இந்த திருமணத்தை செய்ய உள்ளோம்.நான் 2 முறை விபத்தில் சிக்கி உள்ளேன். எங்களுக்கு பிறகு எங்கள் மகள்களுக்கு எங்களின் அனைத்து சொத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனை செயல்படுத்த மகளிர் தினத்தை விட சிறந்த நாள் இருக்க முடியாது என்பதால் அந்த நாளை தேர்வு செய்தோம் என்றார். 

    ×