search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமந்தா ரூத் பிரபு"

    • புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
    • இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

    விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.

    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில்  பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.

     

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்ப பெயரை தன்னுடன் இணைத்து கொண்டார்
    • தனது பதிலுடன் ஒரு நகைச்சுவை எமோஜியை இணைத்து பதிவிட்டார் சமந்தா

    தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.

    4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் "யே மாயா சேஸவே" (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா (Akkineni Naga Chaitanya).

    சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.

    ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் "அக்கினேனி" எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

    சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

    2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனைப்புடன் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சமந்தா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவரது அதிகாரபூர்வ கணக்கில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" (Ask Me Anything) எனும் அமர்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது ஒரு பயனர் அவரிடம், "மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?" என கேட்டார்.

    அதற்கு சமந்தா, "அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன" என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார்.

    சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×