என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்மம்"
- விசாரணை நடத்த கலெக்டரிடம் மனு
- கொல்லங்கோடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் அருகே உள்ள தேனாந்தோட்டம் வீடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார்.
அதில், எனது மனைவியின் தாயார் ராமலட்சுமி, கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பாததால் 11-ந் தேதி நித்திரவிளை போலீசில் புகார் செய்தேன். இந்தநிலையில் கொல்லங்கோடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அங்கு கிடந்த ஆடைகளை வைத்து, அது எனது மாமியார் என உறுதியானது. அதன்பிறகு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் கூறினர். ஆனால் ஒன்றரை மாதம் ஆகியும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே பரிசோதனையை விரைந்து முடித்து எங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.
- பஸ்சில் சென்றுகொண்டிருந்த கவுசல்யா தனது கைப்பையில் 15 பவுன் நகையை வைத்திருந்தார்.
- அதிர்ச்சியடைந்த கவுசல்யா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி தேவாரம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவருடைய மனைவி கவுசல்யா(வயது62).
இவர் தனது கணவருடன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கவுசல்யா தனது கைப்பையில் 15 பவுன் நகையை வைத்திருந்தார்.
வல்லம் மின்நகர் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்க கவுசல்யா எழுந்த போது அவர் 15 பவுன் நகை வைத்திருந்த பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார்.
- இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து வளத்தாமங்கலம் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வளத்தாமங்கலம் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வந்த பாலையன் மகன் சாய்ராமன் (வயது 19).
கட்டிட வேலை பார்த்து வந்தவர். இவர் பாபநாசம் அருகே பண்டாரவாடை உப்புகாரன் ரயில்வேகேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார்.
இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சாய்ராமன் குடும்பத்தினர்கள், உறவின ர்கள், கிராமவாசிகள் ஆகியோர் சாய்ராமன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இறந்தவரின் உடலை பிண ஊர்தி உடன் நடுரோட்டில் வைத்து வளத்தாமங்கலம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
- 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது.
- சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி 4 ரோட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. காந்தி. இவரது மகன் சதீஷ் (வயது 42), விவசாயி . இவரது மனைவி வனிதா (28), தனியார் பள்ளி ஆசிரியர், இவர்களுக்கு சர்வேஷ் (8) என்ற மகன் உள்ளார்.
ரூ.20 லட்சம் கடன்
இந்த நிலையில் சதீசுக்கு 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கழுத்து மற்றும் கை அறுக்கப்பட்ட நிலையில் சதீஷ் இறந்து கிடந்தார். இதனை பாத்த மனைவி வனிதா கதறி துடித்தார். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆத்தூர், கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர். மேலும் மோப்ப நாய் லில்லி சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த மோப்ப நாய் கடம்பூர் பிரிவு ரோடு வரை சென்று திரும்பியது. தடயவியல் நிபுணர்கள் கைேரகை பதிவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் கெங்கவல்லி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வீரகனூர் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சதீஷ் சாவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு-
பரபரப்பு தகவல்கள்
கடன் தொல்லையில் தவித்த சதீஷ் கெங்கவல்லியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விஷம் கேட்டதும், அந்த கடையில் விஷம் இல்லை என்று கடையில் இருந்தவர் கூறிய நிலையில் அருகில் உள்ள கடைக்கு சென்று புதிதாக கத்தி வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றதும் தெரிய வந்தது.
மேலும் நாற்காலியில் அமர்ந்த படியே கை நரம்பு மற்றும் கழுத்தை அறுத்ததற்கான ஆதாரங்களும் இருப்பதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
- பரமத்திவேலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
- விவசாயி இறந்துகிடந்தது குறித்து வீட்டின் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் அருகே தாளக்கரையில் சுதா என்பவரது வீட்டில் விவசாயி செல்வராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தகவல் அறிந்த செல்வராஜின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் நெல்லூர் போலீசார் சுதாவை கைது செய்து செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் செல்வராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்