search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
    X

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்

    • பஸ்சில் சென்றுகொண்டிருந்த கவுசல்யா தனது கைப்பையில் 15 பவுன் நகையை வைத்திருந்தார்.
    • அதிர்ச்சியடைந்த கவுசல்யா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி தேவாரம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவருடைய மனைவி கவுசல்யா(வயது62).

    இவர் தனது கணவருடன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கவுசல்யா தனது கைப்பையில் 15 பவுன் நகையை வைத்திருந்தார்.

    வல்லம் மின்நகர் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்க கவுசல்யா எழுந்த போது அவர் 15 பவுன் நகை வைத்திருந்த பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×