search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ படிப்பு"

    • பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.
    • இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.

    சென்னை:

    2023-24-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதி தொடங்கியது.

    பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கலந்தாய்வில் பங்குபெற்று விருப்ப இடங்களை 20 ஆயிரத்து 83 மாணவ-மாணவிகள் தேர்வு செய்து இருக்கின்றனர்.

    இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

    • நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
    • சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    இதற்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 27-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    பொது கலந்தாய்வில் பங்கேற்கின்ற மாணவ-மாணவிகள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி வரை மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்து லாக் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரேங்க் பட்டியலில் 1-ல் இருந்து 25,856 வரை உள்ள நீட் மார்க் 720-ல் இருந்து 107 வரை உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இதேபோல நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மார்க் 715 முதல் 107 வரை உள்ள மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு தாமதம் ஆகிறது. இன்று வரவேண்டிய முடிவு தள்ளிப்போவதால் அதில் இடம் கிடைக்காதவர்கள் தமிழக மாநில ஒதுக்கீட்டு இடங்களை பெற வரக்கூடும்.

    அதனால் தமிழக மாணவர்களின் நலன் கருதி இடங்களை தேர்வு செய்வற்கு மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    31-ந்தேதி மாலை வரை இடங்களை தேர்வு செய்ய கொடுக்கப்பட்ட வாய்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    3-ந்தேதி மாலை 5 மணி வரை கூடுதலாக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் வங்கி வரைவோலை எடுப்பதில் சிரமம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார்.

    • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 24-ந் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது.
    • கட்-ஆப் மார்க் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.)யை தேர்வு செய்தனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 24-ந் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை கிண்டியில் இன்று நேரடியாக நடந்தது.

    முதலில் விளையாட்டு வீரர்கள் 7 இடங்கள் முன்னாள் ராணுவத்தினர் 11 இடங்கள், மாற்றுத் திறனாளிகள் 223 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதனை தொடர்ந்து அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடந்தது. 606 மருத்துவ இடங்களுக்கு 2,993 பேர் அழைக்கப்பட்டனர். கட்-ஆப் மார்க் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.)யை தேர்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து ஸ்டான்லி, கே.எம்.சி., கோவை, சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர். முதல் இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலையில் கல்லூரியில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.

    • நீட் தேர்வு கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ-மாணவிகள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • ஒதுக்கீட்டு ஆணை அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 71 மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

    10 ஆயிரம் மருத்துவ இடங்கள் இதன்மூலம் நிரப்பப்படுகின்றன. நீட் தேர்வு கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ-மாணவிகள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று முதல் பதிவு செய்தல், கட்டணம் செலுத்துவது, இடங்களை தேர்வு செய்வது ஆகிய நடைமுறைகள் தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. ஆகஸ்ட் 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி இடங்கள் ஒதுக்கப்படும். இறுதி முடிவு 3-ந்தேதி அறிவிக்கப்படும். அதற்கான ஒதுக்கீட்டு ஆணை அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    இதற்கிடையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.
    • நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 6326.

    இதே போல அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 1768 ஆகும்.

    அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்தேசமாக 25-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்குவதை பொறுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும். அதனால் அந்த தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நேற்று முன்தினம் கலந்தாய்வு தொடங்கியது. இன்று இடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 822 இடங்கள் போகிறது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 762 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் இருந்து 23 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 37 இடங்களும் கொடுக்கப்படுகிறது.

    நீட் தேர்வில் டாப் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவில் இடங்களை தேர்வு செய்து சேருவார்கள்.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக தொடங்குகிறது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நேரடியாக நடத்தப்படும்.

    அவை எந்தெந்த தேதியில் நடைபெறும் என்ற விவரங்கள் மருத்துவ கல்லூரி இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

    • சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடம் பிடித்துள்ளார்.
    • தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்ததாக மாணவி கிருத்திகா கூறியுள்ளார்.

    சேலம்:

    2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடமும் பிடித்துள்ளார். அவர் நீட் தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்த இரண்டு மாணவிகளும் சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மாணவி கிருத்திகா கூறுகையில், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியமாக இருந்தது. இதனால் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்தேன்.

    ஆசிரியர்கள், ஆசிரியைகள், நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் பெற்றோர், என்னை ஊக்குவித்தனர். இதனால் என்னால் வெற்றி பெற முடிந்தது. அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.
    • மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 12-ந்தேதி நிறைவடைந்தது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,805 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 199 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசைப் பட்டியலை இன்று காலை வெளியிட்டார். அதை மருத்துவ துறை செயலாளர் ககன்தீப்சிங் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்தும் அறிவித்தார்.

    கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,174 எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன.

    அதே போல 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பி.டி.எஸ். இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

    இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 569 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அரசு ஒதுக்கீட்டில் முதலிடத்தை விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் பிடித்தார். இவர் நீட் தேர்விலும் 720-க்கு 720 பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    தரவரிசை பட்டியலில் மற்ற 9 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

    சூர்ய சித்தார்த் (715), எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், சென்னை.

    வருண் (715), ஸ்ரீ சைதான்யா டெக்னோ பள்ளி, சேலம்.

    சஞ்சனா (705), சுகுணா பி.ஐ.பி. பள்ளி, நாகமலை, கோவை.

    ரோசன் ஆன்டோ (705), ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, திருவள்ளூர்.

    சஞ்சய் பிரகாஷ் (705), வேலம்மாள் வித்யாலயா மெயின் பள்ளி, சென்னை.

    கவியரசு (705), ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, சேலம்.

    அபிஷேக் (705), சின்மயா வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி, சென்னை.

    லக்சன்யா அபிகேசவன் (705), விகாஸ் தி கான்செப்ட் பள்ளி, காஞ்சிபுரம்.

    தமிழினியன் (705), வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, பஞ்செட்டி, திருவண்ணாமலை.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்களை படித்தவர்கள் விவரம் வருமாறு:-

    கிருத்திகா (569 மதிப்பெண்), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

    பச்சையப்பன் (565), அரசு மேல்நிலைப் பள்ளி, மங்கரை, தருமபுரி.

    முருகன் (560), அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி, மவுலிவாக்கம், காஞ்சிபுரம்.

    ரோஜா (544) அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

    அன்னபூரணி (538), அரசு மேல்நிலைப்பள்ளி, உலகம்பட்டி, சிவகங்கை.

    அர்ச்சனா (537), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.

    அன்னபூரணி (533), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடையார்பாளையம், அரியலூர்.

    புகழேந்தி (531), அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

    கணேஷ் (530), வி.எம்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம், தேனி.

    சாம் (523), அரசு மேல் நிலைப்பள்ளி, காசி நாயக்கன்பட்டி, திருப்பத்தூர்.

    மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்காக 40 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3,994 அதிகம்.

    இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள்-36, இ.எஸ்.ஐ.-1, சுயநிதி மருத்துவ கல்லூரிகள்-21, நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரிகள்-13 என மொத்தம் 71 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 475 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2,150 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

    7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 473.

    7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பி.டி.எஸ். இடங்கள் 133.

    கவுன்சிலிங்கை பொறுத்தவரை ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்று முதலில் கூறினார்கள். அவ்வாறு நடத்தும்போது மாணவர்கள் மத்திய அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க சிரமம் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறினோம்.

    இதையடுத்து மத்திய அரசு தொடங்கிய பிறகு தொடங்க அனுமதி தரப்பட்டது. மத்திய அரசு கவுன்சிலிங் வருகிற 20-ந்தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தொடங்கினால் 25-ந்தேதி தமிழகத்தில் கவுன்சிலிங் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
    • அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உள்பட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

    அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உள்பட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேலம் மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறப்பிடத்தக்கது.

    • மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
    • 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.

    மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.

    இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

    • கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
    • மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 29-ந்தேதி தொடங்கியது.

    கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 500 பேருக்கு மேல் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.

    மாணவ-மாணவிகள் அந்தந்த இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 30 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    கால அவகாசம் அதற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பு இல்லை. வருகிற 15-ந்தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. அதனால் மாணவர்கள் தாமதமின்றி உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து சீட் மேட்ரிக்ஸ் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அதற்கான பணிகள் நிறைவடைய ஒரு வாரம் ஆகலாம். அதனால் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வு மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தகுதி சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் கலந்தாய்வுக்கு முன்னதாக சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணைய போர்ட்டலில் பதிவு செய்ய முடியாத நிலை தற்போது உள்ளதால் கலந்தாய்விற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதிச்சான்றிதழ் ஒப்படைப்பதில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 59 ஆயிரம் பேர் பணம் கட்டி சமர்ப்பித்தனர்.

    • மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் எவ்வாறு ஆன்லைனில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட விபரங்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் விளக்கினார்.

    இதில் மாவட்டத்தில் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் 90 பேர் பங்கேற்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு https://tnhealth.tn.gov.in/  https://tnmedicalselection.net/  என்ற இணையதளத்தில் ஜூலை 10-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டுகளை விட கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 27-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஆவலோடு விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் மருத்துவக் கல்வி இயக்ககம், 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருபவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டுகளை விட கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 73-ம், பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 73-ம், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13 ஆயிரத்து 610-ம், பி.டி.எஸ். படிப்பில் சேர ரூ.11 ஆயிரத்து 610-ம் கட்டணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் ரூ.53 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இவர்களுக்கான கட்டணமும் குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ஓராண்டுக்கு கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ரூ.13 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டைவிட ரூ.1 லட்சம் அதிகமாக உயர்த்தி, ரூ.24 லட்சத்து 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×