search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ படிப்பு"

    • திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.
    • மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைந்து பல்துறை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.

    அவர்கள் உடற் கூறியல், உடலியல், நோயியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பாடங்களை படிப்பார்கள். இது பொறியாளர்களுக்கு உயிரி சாதனங்கள் மற்றும் ஐ.ஒ.டி. அடிப்படையிலான பயோ சென்சார்களை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதுள்ள பயோ மெடிக்கல் என்ஜினீயர்கள் மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுடன் இந்த புதிய படிப்பையும் வழங்கும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையை தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.

    மருத்துவ கல்லூரியில் படிப்பது பொறியியல் மாணவர்களின் தத்துவார்த்த அறிவை சோதிக்கும் மருத்துவ உபகரணங்களை கொண்டிருப்பதால் அவர்களுக்கு அதிக வெளிப்பாட்டை கொடுக்கும் என்றனர்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி கூறுகையில், ஒரு பொறியியல் மாணவர் இந்த படிப்பின் மூலம் மருத்துவ கள அறிவை பெறுவார். மருத்துவ கள அறிவு, மருத்துவமனைகளில் மருந்து பொறியாளர்களாக அல்லது உயிரி மருத்துவ பொறியாளர்களாக பணியாற்ற உதவும் என்றார்.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "சிண்டிகேட் அனுமதி பெற்ற பின், இரண்டு பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தை உருவாக்கும். கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே உள்ள பி.இ. உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் ஒரு செமஸ்டர் படிக்க அனுமதிக்க இரு பல்கலைக்கழகங்களும் உடன்பாட்டிற்கு வந்தன.

    மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் இதே போன்ற கூட்டாண்மைகளை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

    • பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
    • புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. புதுவையில் 3 கட்ட கலந்தாய்வுதான் நடந்துள்ளது.

    பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கான காலக்கெடுவும் முடிந்துள்ளது. இறுதி காலக்கெடுவுக்கு பின்னரும் சென்டாக் நிர்வாகம் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்து ஆணை வழங்கி வருகிறது.

    இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா? என பெற்றோர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளிப்போனது.

    இதை காரணம் காட்டி தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த 2 கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

     

    இந்த நிலையில் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளிப்போனதால் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தள்ளிப்போனது.

    எனவே புதுவையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய ஒதுக்கீடு வீணாவதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும்

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு என 15 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தப் 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு பொருத்தவரை 6 இடங்கள் காலியாக இருந்து அது வீணானது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடத்தை நிரப்ப வேண்டும் என தேசிய மருத்துவ துறை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு வீணாவதை தடுக்கும் வகையில் மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    மேலும், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத இட ஒதுக்கீடுகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    • தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
    • புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 3 கட்ட கலந்தாய்வு முடிந்து தற்போது இறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

    மாநில அரசின் எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்களில் சேராமல் காலாவதியாகும் 34 இடங்களுக்கு இறுதி சுற்று கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதற்கான விவரங்கள் மருத்துவ கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி வருகிற 30-ந்தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும்.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மத்திய மருத்துவ குழு 3 கட்டமாக கலந்தாய்வை நடத்தி முடித்துள்ளது. இதில் நாடு முழுவதும் 1640 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 872 ஆகும்.

    தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 59 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 1 டஜன் இடங்கள் நிரம்பவில்லை.

    அகில இந்திய அளவில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ந்தேதிக்குள் திரும்ப பெற வேண்டும் அல்லது சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை 30 வரை குறைக்க மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகின்றன.

    இதுகுறித்து மருத்துவ கல்வி பயிற்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியதாவது:-

    அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 872, எய்ம்ஸ், ஜிப்மர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் 44 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை ஒப்பிடுகையில் ஐந்தில் இரண்டு பங்கு இடங்கள் மட்டுமே நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ளவை. மேலும் 44 இடங்கள் என்.ஆர்.ஐ. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ளன.

    கிட்டதட்ட 50 சதவீத காலி இடங்கள் அரசு கல்லூரிகளில் உள்ளன. முந்தைய சுற்றுகளில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு "இலவச வெளியேறுதல்" மற்றும் ஒத்திவைக்கப்படாத கவுன்சிலிங் செயல்முறை ஆகியவற்றால் காலி இடங்கள் அதிகளவில் உருவாகி உள்ளன.

    புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் இந்த கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யாவிட்டால் அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ள கல்லூரிகளில் சேரவில்லை என்றால் இந்த உயர் தேவை இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்.

    மத்திய மற்றும் மாநில கலந்தாய்வில் இடங்கள் தடைபடுவதை தவிர்க்க மாநிலங்கள் கலப்பின கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கூறுகின்றனர்.

    • மகளின் படிப்பு செலவுக்காக நந்தகுமார் தான் ஓட்டிவந்த ஆட்டோவை விற்று விட்டார்.
    • பல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு தமிழ்விழி, கனிமொழி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் தமிழ்விழி கன்னிகைப்பேர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து 419 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட தமிழ்விழி நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி ஆனார்.

    ஆனால் அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சேர இடம் கிடைத்தது. ஆனாலும் போதிய பணம் இல்லாததால் மாணவி தமிழ்விழி கல்லூரியில் சேரமுடியாமல் தவித்தார்.

    இதைத்தொடர்ந்து மகளின் படிப்பு செலவுக்காக நந்தகுமார் தான் ஓட்டிவந்த ஆட்டோவை விற்று விட்டார். தற்போது அவர் கூலித்தொழிலாளியாக மாறி வேலைக்கு சென்று வருகிறார். அவரது மனைவியும் கூலி வேலை பார்த்து வருகிறார். ஆனாலும் மகளின் மருத்துவ கனவை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாணவி தமிழ்விழி கூறும்போது, பல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் படிக்க வைக்க பெற்றோரிடம் வசதி இல்லை. எனது படிப்பிற்காக தந்தை ஓட்டி வந்த ஆட்டோவையும் விற்று விட்டார். இப்போது பெற்றோர் கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.

    அவர்களது வருமானம் வீட்டு செலவுக்கே போதுமானதாக இல்லை. எனினும் எனது கனவை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். கல்லூரியில் சேர உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
    • ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

    தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.

    கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.

    புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

    கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.

    இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

    ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.

    இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

    இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.

    விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 24-ந்தேதி காலை 10 மணி முதல் 28-ந்தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் மற்றும் நிர்வாக இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது.

    முதல் சுற்று கலந்தாய்வுக்கு பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ்., 767 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. மொத்தம் 1670 மருத்துவ இடங்கள் இருக்கின்றன.

    அந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள் இன்றும் நாளையும் இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும். நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

    24-ந்தேதி காலை 10 மணி முதல் 28-ந்தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வருகிற 29, 30-ந்தேதிகளில் தர வரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தொடர்ந்து வரும் 31-ந் தேதி இடங்கள் குறித்த விண்ணப்பங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். செப்டம்பர் 4-ந்தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று மருத்துவ கல்வி தேர்வுக்குழும செயலர் டாக்டர் முத்துசெல்வன் தெரிவித்தார்.

    • வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும்.
    • வருகிற 31-ந் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2023-24 கல்வியாண்டு மாணவா் சோ்க்கைகான முதல் சுற்று கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது.

    அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை, கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியே நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு அரசு ஒதுக்கீட்டில் 119 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ். இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 648 எம்.பி.பி.எஸ், 818 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இந்த நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேதி தொடங்குகிறது.

    இதுதொடா்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    2-ம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதியானவா்கள் வருகிற 21-ந் தேதி காலை 10 மணி முதல் 22-ந் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

    வருகிற 24-ந் தேதி காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதைத் தொடா்ந்து வருகிற 31-ந் தேதி இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். செப்டம்பா் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பா் 4-ந் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கை நிறைவடைந்து உள்ளது. இதில், சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மற்ற இடங்கள் இணைய வழியில் நடைபெற்றது. அதன்படி, அனைத்து இடங்களும் தகுதியான மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மருத்துவ இடங்கள் பெற்று சோ்க்கை ஆணை பெற்றவா்கள் நேற்று மாலைக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மருத்துவ மாணவா் தோ்வுக்குழு செயலா் முத்துசெல்வன் கூறுகையில், கல்விக் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும் என பெற்றோா் கோரிக்கை வைத்தனா்.

    அதை ஏற்று, மருத்துவ இடங்களைப் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், கல்லூரிகளில் சேராதவா்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்றாா்.

    • முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.

    இவற்றில் 2023-24 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தரவரிசை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 162 மாணவர்களும், கேரளாவை சேர்ந்த 36 மாணவர்களும் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதற்கிடையே இருவேறு மாநிலங்களில் இரட்டை குடியுரிமை அடிப்படையில் தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசையிடம் சமூக அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளது புதுவையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தந்த மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
    • முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6226 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1767 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 25-ந் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் வழியாக நடந்த இக்கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

    அரசின் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதலில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து லாக் செய்தனர். நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து ஒதுக்கீட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு 11-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன. அதே போல் அரசு கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின. சுயநிதி கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் கொஞ்சம் காலியாக உள்ளன.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. 11-ந் தேதி மாலைவரை கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு தான் எத்தனை பேர் கல்லூரிகளில் சேரவில்லை என முழுமையாக தெரியவரும்.

    அதில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இது போல் ஏற்படும் காலி இடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் மொத்தம் 4 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.

    இந்த மாதம் இறுதிக்குள் பெரும்பாலான மருத்துவ இடங்கள் நிரம்பி விடும். செப்டம்பர் 1-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. பொது கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். 20 ஆயிரத்து 83 பேர் மருத்துவ இடங்களை தேர்வு செய்தனர்.

    இட ஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது. இடங்களை தேர்வு செய்தவர்கள் ஒதுக்கீட்டு ஆணை நாளை (6-ந்தேதி) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

    ஒதுக்கீட்டு கடிதம் பெற்ற மாணவ-மாணவிகள் 11-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு பள்ளியில் படித்த 606 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் பெற்றுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவ-மாணவிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

    அதனை அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மற்றும் முதல்வர்கள் பின்பற்ற வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் அனைத்து அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    7.5 சதவீத அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை பெற்றுள்ள மாணவ-மாணவிகளிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி, உணவு கட்டணம், புத்தகம், வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப், பல்கலைக்கழக பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம் உள்பட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

    கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் பின்பற்ற வேண்டும்.

    மருத்துவ படிப்பில் சேரும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். அதனால் அவர்களது விண்ணப்பத்தை உயர்கல்வி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் எவ்வித கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×