search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி முரளீதரன்"

    • கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
    • திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதனால் கேரளாவில் அப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்ட ணியின் கேரள பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீகாரில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதனால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவரும், மாநில பாரதிய ஜனதா தலைவ ருமான சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாநில அரசை விமர்சித்தும், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தியும் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    தளிபடவு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடிக்கு உத்தரவாதம் புதிய கேரளா என்று முழக்கமிட்டார்.

    20 பாராளுமன்ற தொகுதிகள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை பிப்ரவரி 27-ந் தேதி பாலக்காட்டில் முடிவடைகிறது. வருகிற 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடை பெறும் பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காசர்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேல்பரம்பில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில கன்வீனர் துஷார் வெள்ளப்பள்ளி, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், தேசிய வாத கேரள காங்கிரஸ் மாநில தலைவர் குருவில்லா மேத்யூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • வீட்டை பார்வையிட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மத்திய மந்திரி வீட்டில் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா? அங்கு ரத்த கறை எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி முரளீதரன், வெளியுறவு துறை இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இவர் டெல்லியில் இருந்து கேரளா வரும்போது திருவனந்தபுரம் கொச்சுளூர் பகுதியில் உள்ள வீட்டில் தங்குவது வழக்கம்.

    முரளீதரன் டெல்லியில் இருக்கும் போது இந்த வீடு பூட்டியே இருக்கும். அப்போது வீட்டில் வேலை செய்யும் பெண், காலையில் வந்து வீட்டை பெருக்கி சுத்தம் செய்து செல்வது வழக்கம்.

    அதன்படி வேலைக்கார பெண் நேற்று மத்திய மந்திரி முரளீதரன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி கிடந்தன.

    மேலும் வீட்டில் கார் நிறுத்தும் பகுதி மற்றும் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளில் ரத்த கறைகள் காணப்பட்டன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண், இது பற்றி மந்திரியின் உதவியாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். வீட்டை பார்வையிட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மத்திய மந்திரி வீட்டில் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா? அங்கு ரத்த கறை எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள்.
    • இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கினியா நாட்டில் கச்சா எண்ணெய் ஏற்ற சென்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் ஆப்பிரிக்க கடல் பகுதியில் கினியா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது.

    சரக்கு கப்பலில் தமிழகத்தை சேர்ந்த 3 மாலுமிகள் உள்பட 26 இந்தியர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை உறவினர்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் மத்திய, மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக, கேரள மாலுமிகள் அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உணவு, குடிநீரின்றி தவிப்பதாகவும், தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் உடனே தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

    சிறை வைக்கப்பட்ட மாலுமிகளை மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவர்களை நார்வே கடற்படையிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள். அவர்களை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தை பின்பற்றுகின்றன. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

    விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள். அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இதனால் கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×