search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Minister Muralitharan"

    • கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
    • திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதனால் கேரளாவில் அப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்ட ணியின் கேரள பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீகாரில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதனால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவரும், மாநில பாரதிய ஜனதா தலைவ ருமான சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாநில அரசை விமர்சித்தும், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தியும் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    தளிபடவு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடிக்கு உத்தரவாதம் புதிய கேரளா என்று முழக்கமிட்டார்.

    20 பாராளுமன்ற தொகுதிகள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை பிப்ரவரி 27-ந் தேதி பாலக்காட்டில் முடிவடைகிறது. வருகிற 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடை பெறும் பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காசர்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேல்பரம்பில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில கன்வீனர் துஷார் வெள்ளப்பள்ளி, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், தேசிய வாத கேரள காங்கிரஸ் மாநில தலைவர் குருவில்லா மேத்யூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மீனவர்கள் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் மத்திய மந்திரியிடம் வழங்கப்பட்டது.
    • இந்தச் சந்திப்பின்போது மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

    புதுடெல்லி:

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை

    விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முரளிதரன் உடன் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு நேரில் சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

    அந்தக் கடிதத்தில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

    கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய இணை மந்திரி முரளிதரன், மீனவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    ×