search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதம்"

    • பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை.
    • யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அசாமை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல.

    மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது.

    பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரையில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இஸ்மாயில்புரம் 12-வது தெரு வள்ளியம்மை அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட குழு உறுப்பினர் சாம்பசிவம் தலைமை தாஙகினார்.மாவட்டத் துணைத் தலைவர் எகியா, மாவட்ட குழு உறுப்பினர் மாயழகு முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார்.

    மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாவட்ட தலைவர் அலா வுதீன், அருட்தந்தையர்கள மரியநாதன், லாரன்ஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கணேசன், தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் செய்யது அபுதாஹிர், தமிழ்ச்செல்வி காளிமுத்து, குமரவேல்.

    மாவட்ட செயலாளர் கணேச ஒமூர்த்தி, பொரு ளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனிபேஸ், தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் உஸ்மான் அலி, முஸ்லிம் ஜமாத் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சேக் அப்துல்காதர், செயலாளர் முகமது முஸ்தபா, துணைச் செயலாளர் காஜா மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் இக்பால் பாட்சா, ஆகியோர் பேசினர்.

    மாவட்ட குழு உறுப்பினர்கள் சாந்தாரா, அப்துல் அஜீஸ், பிரபாகரன், அப்துல் குத்தூஸ், கிளை செயலாளர் புலி சேகர், துணை செயலாளர் அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    • இந்து மகாசபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது

    நாகர்கோவில் :

    அகில பாரத இந்து மகாசபா மாநிலத்தலைவர் த.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாநகர தலைவர் ராஜேஷ் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் நேற்று நாகர்கோவியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாகாகோவில் ஆசாரிபள்ளம் பழமையான காசநோய் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு இடம் கையகப்படுத்தும்போது அந்த இடத்தில் இருந்த இந்து ஆலயங்களையும் அரசே தினமும் பூஜையோடு பராமரித்து வருகிறது. இந்த இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது. இது இந்து ஆலயங்களுக்கு சொந்தமான இடமானதால் அரசே இந்த ஆலயத்தை பராமரித்து வருகிறது. சமீபத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக மாறிய பிறகும் ஆலய பூஜைகள் தினசரி நடைபெற்று வருகிறது.

    எனவே அங்கு புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். மருத்துவமனையில் ஏற்கனவே என்ன நடைபெற்று வருகிறதோ, அது தொடர வேண்டும். வேறு எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×