search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்ணெண்ணை"

    • கணேசன் கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் பல்வேறு விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பேசிவருகிறார். இதனால் தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் தி.மு.க. தொழிற்சங்க தலைவரான கணேசன், தமிழக கவர்னரை ஜூன் 27-ந் தேதிக்குள் மத்திய அரசு மாற்றாவிட்டால், 28-ந் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டியிருந்தார்.

    அவரின் இந்த நடவடிக்கை மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அறிவித்தபடி இன்று வரலாம் என்று கருதப்பட்டது. இதனால் அவர் கூறிய இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென காரில் வந்த கணேசன், கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அப்பகுதியில் பதிவாகி உள்ள சி.சி. டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மத்திய பாகம் காவல் சரகத்திற்கு உட்பட்ட எம்பரையர் தெரு பகுதியில் ஆரூடா (47) என்பவர் வீட்டின் முன்பும், தென்பாகம் காவல் சரகத் திற்கு உட்பட்ட ஜார்ஜ் ரோடு காந்திநகர் ஜெனிரோ (46) வீட்டின் முன்பும் மண்ணெண்ணை பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசப்பட்டு உள்ளது.

    தெருக்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர். நள்ளிரவு 12.40 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அந்த நேரத்தில் அப்பகுதியில் பதிவாகி உள்ள சி.சி. டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆரூடா மகன் மரியா அந்தோணி டைட்டஸ், ஜெனிரோ மகன் கேத்ரினான் ஆகிய இருவர் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் மண்ணெண்ணை பாட்டில்களில் தீ வைத்து வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×