search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சுவிரட்டு"

    • சிவகங்கை மாவட்டத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தனர்.

    சிவகங்கை

    வாடிவாசல் மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழா மற்றும் விவசாய பணிகள் காரணமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தன. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிகள் மே மாதத்திற்கு பிறகு நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். மீறி மஞ்சு விரட்டு நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.

    பின்னர் கவுரவ தலைவர் பனங்குடி சேவியர் கூறுகையில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    மாநில தலைவர் அந்தோணி, துணைத்தலைவர் பரத்ராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் 23 ஆண்டுகளுக்கு பின் மஞ்சுவரட்டு நடந்தது.
    • இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மா பட்டு ஆதினமிளகி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு தென்மாபட்டு கிராம முக்கியஸ்தர்கள் சின்னையா கோவிலில் இருந்து கிராம பட்டெடுத்து வந்து தென்மாபட்டு கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு கண்மாய்க்குள் அவிழ்த்து விடப்பட்டது.

    சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர். இங்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மஞ்சுவிரட்டு முடிந்தவுடன் கிராம பாரம்பரியமான விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

    • ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடத்த கோரி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்தபோட்டி நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மட்டுமே வடமஞ்சுவிரட்டு நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் வடமஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பாக சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் அந்தோணிமுத்து, துணை தலைவர் பாரத்ராஜா முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கோவில் மற்றும் தேவாலய விழாக்களில் விதிமுறை பின்பற்றியே ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்து வந்தது.

    வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில்தான். மேலும் வடமாடு மஞ்சுவிரட்டில் சங்கத்தில் பதிவு செய்து, விதிமுறைகளை பின்பற்றும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் வருடம் முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்த அனுமதிக்க வேண்டும்.

    போட்டியில் மருத்துவ பரிசோதனை செய்த காளைகள் மட்டுமே களமிறக்கப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்படும் காளைகள், வீரர்கள் மட்டுமே களமிறக்கப்படுவதால், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.

    ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பதால், வடமஞ்சு விரட்டும் ஆண்டு முழுவதும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே வடமஞ்சுவிரட்டுக்கு அனுமதி தரப்படும்.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    இந்த உத்தரவை திரும்ப பெற்று ஆண்டு முழுவதும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மஞ்சுவிரட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன.
    • மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர் நாடு. இதனை சார்ந்தது ஒத்தப்பட்டி. இங்குள்ள மந்தை கருப்பணசாமி மற்றும் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாய் பகுதியில் தொழு அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மேலூர், வெள்ள லூர், உறங்கான்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தது. இதையொட்டி கிராமத்தின் சார்பில் ஜவுளி பொட்டலங்கள் கொண்டு வந்து காளைகளுக்கு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது. இதில் ஏராளமான மாடுகளை வீரர்கள் பிடித்தனர். மாடுகளை பிடிக்கும்போது 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் வெள்ளலூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழவளவு போலீசார் செய்திருந்தனர்.

    • பள்ளப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    • 1994-ம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின்போது 10 காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் என்பது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

     மதுரை

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில் விழாக் குழு தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் திருவிழா வருகிற 15-ந்தேதி அன்று நடத்த முடிவு செய்துள்ளனர். திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முக்கியமாக வடமாடு மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது.

    1994-ம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின்போது 10 காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் என்பது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

    வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரி க்கையை பரிசீலிக்காமல் ெகாரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர்.

    எனவே பள்ளப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வருகிற 15-ந்தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள்சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது என்று கூறினார்.

    இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் தமிழக அரசிடம் மனு அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • ஆத்தங்கரைபட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆத்தங்கரை பட்டியில் பெரியகருப்பர், சின்ன கருப்பர் கோவில் திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு ஆத்தங்கரைபட்டி கிராம தலைவர் செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோரின் தலைமையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டன. வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கும் மாடுகளைக் கொண்டு வந்த வீரர்களுக்கும் அனைத்து வீடுகளிலும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    • புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
    • சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் மேல பட்டமங்கலத்தில் மாணிக்க நாச்சி அம்மன் சித்தங்காத்த அய்யனார் கருப்பர் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமையில் இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி மேலபட்டமங்கலம், அப்பா குடிப்பட்டி, கொளுஞ்சி பட்டி, மின்னல்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய 5 ஊர் கிராம மக்கள் இணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்க ளுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மஞ்சு விரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ளது வஞ்சி நகரம். இங்குள்ள கருப்பணசாமி கோவிலுக்கு பட்டத்து கோவில் காளை உள்ளது.

    இந்த காளை அலங்காநல்லூர், அவனியா புரம், சிராவயல் உள்பட பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த காளை இன்று காலை இறந்தது.

    இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதனை அடக்கம் செய்தனர்.

    ×