search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manchurian"

    • திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூரில் புனித ஜெபமாலை மாதா ஆலய சப்பர திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ கத்தோலிக்க இளைஞர் மன்றத்தால் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்க வேண்டும் என்று விழா குழுவினரால் நேரநிர்ணயம் செய்யப்பட்டது.

    இதில் 9 பேர் கொண்ட 15 குழுவினர் களம் இறங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை பார்பதற்காக சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விழாவில் காரைக்குடி வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • ஆத்தங்கரைபட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆத்தங்கரை பட்டியில் பெரியகருப்பர், சின்ன கருப்பர் கோவில் திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு ஆத்தங்கரைபட்டி கிராம தலைவர் செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோரின் தலைமையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டன. வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கும் மாடுகளைக் கொண்டு வந்த வீரர்களுக்கும் அனைத்து வீடுகளிலும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    • சிறுகூடல்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டியில் நாட்டார் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை உணர்த்தும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கீழ்ச்செவல் பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
    • சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் மேல பட்டமங்கலத்தில் மாணிக்க நாச்சி அம்மன் சித்தங்காத்த அய்யனார் கருப்பர் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமையில் இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி மேலபட்டமங்கலம், அப்பா குடிப்பட்டி, கொளுஞ்சி பட்டி, மின்னல்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய 5 ஊர் கிராம மக்கள் இணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்க ளுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மஞ்சு விரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஹோட்டலில் செய்வதைப்போல் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ,
    சோளமாவு, மைதா - தலா 25 கிராம்,
    முட்டை - 1,
    கொத்தமல்லி - சிறிது,
    எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 2,
    பூண்டு - 6 பல்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சைமிளகாய் - 5,
    சோயா சாஸ், தக்காளி சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :


    கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    ஊற வைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன்  சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மீன் மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலை அந்த இட்லியை வைத்து மஞ்சூரியன் செய்யலாம். இன்று சுவையான இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி - 8
    மைதா - 2 டீஸ்பூன்
    கார்ன் ஃப்ளார்(சோளமாவு) - 1  டீஸ்பூன்   
    அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - ருசிக்கு
    சமையல் சோடா - 1 சிட்டிகை
    தண்ணீர் - மாவு கலக்க
    முட்டைகோஸ் - 1 கப் (விரும்பினால்)
    கறிவேப்பிலை - 1 கொத்து
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    சாஸ் தயாரிக்க :

    பூண்டு - 1+1/2  டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 2 மீடியம் சைஸ்
    குடை மிளகாய் - 1 பெரியது
    ரெட் சில்லி சாஸ் -  1 டீஸ்பூன்
    லைட் சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    டொமேட்டோ கெட்சப் -  1+1/2 டீஸ்பூன்
    சர்க்கரை - 1 சிட்டிகை
    அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
    உப்பு - தேவைக்கு
    வெங்காயத்தாள் - 1/4 கப்



    செய்முறை :

    இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத் துண்டுகளை தனித்தனி இதழ்களாக பிரித்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு, சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் இட்லியை மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    கடைசியாக பாத்திரத்தில் ஒட்டி கொண்டிருக்கும் மாவில் நீளமாக நறுக்கிய முட்டைகோஸை பிரட்டி எண்ணெயில் பொரித்து அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து மொறு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1+1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும் மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறவும்.

    2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    இப்போது சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை, சிட்டிகை அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.

    உடனடியாக பொரித்த இட்லியை போட்டு பிரட்டவும்.

    கடைசியாக வெங்காயத்தாளை தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.

    பரிமாறும் போது பொறித்து வைத்த முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து கொடுத்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×