என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சுவிரட்டு போட்டி
    X

    மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை துரத்திய இளைஞர்கள்.

    மஞ்சுவிரட்டு போட்டி

    • சிறுகூடல்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டியில் நாட்டார் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை உணர்த்தும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கீழ்ச்செவல் பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×