search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதார நிபுணர்"

    • நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா 330 முதல் 350 இடங்களில் வெற்றி பெறும்.
    • காங்கிரசை பொறுத்தவரை 2014 தேர்தலில் பெற்றதைவிட 2 சதவீத தொகுதிகள் குறைவாகவே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    பிரபல பொருளாதார மற்றும் வாக்களிப்பியல் துறை நிபுணரான சுர்ஜித் பல்லா ஆய்வு நடத்தி வாக்காளர்களின் மனநிலை பற்றிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதுபற்றி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா 330 முதல் 350 இடங்களில் வெற்றி பெறும்.

    கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும் போது வெற்றி பெறும் இடங்கள் 5 முதல் 7 சதவீதம் அதிகமாக இருக்கும்.

    ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அலை, எதிர்ப்பு அலை என்று ஏதாவது இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் எந்த அலையும் இருக்காது. காங்கிரசை பொறுத்தவரை 2014 தேர்தலில் பெற்றதைவிட 2 சதவீத தொகுதிகள் குறைவாகவே பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை அந்த கூட்ட ணிக்கு ஒரு தலைமையை தேர்வு செய்து முன்னிலை படுத்தி இருந்தால் போட்டி நிலவி இருக்கலாம் என்று கருதுகிறேன்.

    பா.ஜனதா தொடர்ந்து பலவீனமாக இருக்கும் தமிழ்நாட்டில் கூட 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதற்கு மேல் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை.

    அதே போல் கேரளாவிலும் ஒன்று அல்லது 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    வாஷிங்டன்:

    சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் கூறியதாவது:-

    இந்தியா வலுவான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது.

    இதன் மூலம், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. 2023 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். 2024-ம் நிதியாண்டில் இருந்து 2025-ம் ஆண்டிற்கு 0.3 சதவீத புள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.

    மேலும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மதிப்பில், இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வலிமையானது. உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    அதே நேரத்தில், வளர்ந்து வரும் மற்றும் வளரும் ஆசியாவின் வளர்ச்சி 2023-ம் ஆண்டு மதிப்பிடப்பட்ட 5.6 சதவீதத்தில் இருந்து 2024-ம் ஆண்டில் 5.2 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டில் 4.9 சதவீதமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2023-ம் ஆண்டில் 3.2 சதவீதமாக மதிப்பிடப்பட்ட உலகளாவிய வளர்ச்சி, 2024 மற்றும் 2025-ல் அதே வேகத்தில் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    • சுகாதாரத்துறையில் முதலீடு செய்யலாம்.
    • வேலைவாய்ப்புகள் உருவாவது அதிகரித்து வருகிறது.

    புதுடெல்லி :

    பொருளாதார நிபுணரும், பிரதமர் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    நாம் முழுமையான வறுமையில் இருப்போரை இலக்காக கொள்ள வேண்டும். ஆனால் இலக்கு இன்றி அனைவருக்கும் இலவசங்களை அள்ளி வீசுவது ஒருவிதத்தில் சரியல்ல, அதை ஊக்கப்படுத்தக்கூடாது.

    இலவச மின்சாரம் போன்ற திறந்த நிலை மானிங்களுக்கு விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட இலக்குக்கான மானியங்கள் தேவை. தேவைப்படுகிற நேரத்தில் ஏழை மக்களுக்கு அது உதவிகரமாக இருக்கும். உதாரணத்துக்கு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட தேவையை சொல்லலாம்.

    எல்லோருக்குமான திறந்த நிலை இலவசங்களை வழங்க பயன்படுத்துகிற தொகையை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யலாம்.

    வேலையில்லா திண்டாட்டம் பற்றி கேட்கிறீர்கள். வேலையின்மை பிரச்சினை குறைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் உருவாவது அதிகரித்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நிலையான வளர்ச்சி நீண்டகாலத்துக்கு நீடிப்பது முக்கியம்.

    வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சேவைத்துறைகளுக்கு வழங்க வேண்டும்.

    சரக்குகள், ஜவுளி, தானியங்கி உதிரி பொருட்கள் உள்ளிட்ட 14 துறைகளில் அரசு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.

    அடுத்த சில ஆண்டுகளுக்கு வேலைகளை வழங்கக்கூடிய நல்ல நிலையில் இந்தியா இருக்கிறது.

    வர்த்தக பற்றாக்குறையை பொறுத்தமட்டில் பிரச்சினைக்கு புறக்காரணிகளே காரணங்கள் ஆகின்றன. ஆனால் இது நிர்வகிக்கக்கூடிய அளவிலேதான் இருக்கின்றன. இந்தியாவின் நடப்பு கணக்கு பிரச்சினை சிறியதுதான். ஏனென்றால் சேவைகள் ஏற்றுமதி நன்றாக இருக்கிறது.

    2047-ம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த இந்தியாவாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கு பற்றி கேட்கிறீர்கள். இதற்கு கடினமான உழைப்பு தேவைப்படுகிறது. இது சாத்தியமானதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×