search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்சில்வேனியா"

    • வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
    • டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்

    இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.

    தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.

    இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.

    சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.

    அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.

    தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.

    ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.

    டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கோல்டன்டூடுல் நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிக விசுவாசம் கொண்டவை
    • வங்கி தரப்பிலிருந்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது

    அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரம்.

    பிட்ஸ்பர்க் நகரத்தில் வசித்து வருபவர்கள் 34 வயதாகும் க்ளேட்டன் லா (Clayton Law) மற்றும் அவரது குடும்பத்தினர். இவர்கள் செசில் (Cecil) என பெயரிட்ட கோல்டன்டூடுல் (Goldendoodle) வகை நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். செசிலுக்கு 7 வயதாகிறது.

    கடந்த டிசம்பர் மாதம், லா, தனது வீட்டை சுற்றி புதிய வேலி அமைக்க விரும்பினார். இதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து $4000 கரன்சி நோட்டுக்களை எடுத்து வந்தார். அப்பணத்தை தம்பதியினர் தங்கள் சமையலறை மேடையின் மீது வைத்து விட்டு வேறு ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக செசில், அந்த ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும் தின்று விட்டது.

    செசில் உண்ட பிறகே ஓடி வந்து அதை கண்ட லா குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இழந்த பணத்திற்காகவும், தங்கள் செல்ல பிராணியின் உடல்நலத்திற்காகவும் ஒரே சமயத்தில் அவர்கள் கவலைப்பட தொடங்கினர்.

    க்ளேட்டனின் மனைவி, கேரி உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டார். நாயின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இல்லாத வரை அச்சப்பட வேண்டாம் என மருத்துவர் கூறியதை அடுத்து இழந்த பணம் குறித்து யோசித்தனர்.

    கேரி, இணையதளத்தில் "பணத்தை நாய் சாப்பிட்டால் என்ன செய்வது?" என கேட்டு மீட்கும் வழிமுறைகளை தேட தொடங்கினார்.

    வங்கியை தொடர்பு கொண்டு லா சம்பவத்தை தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினர்.

    சில மணி நேரம் கடந்ததும் சில கரன்சி நோட்டுக்களை செசில் வாந்தி எடுத்தது; சிலவற்றை உடலிலிருந்து கழிவில் வெளியேற்றியது.

    மிகுந்த சகிப்புத்தன்மையுடன் கிடைத்த கரன்சிகளை எடுத்து சுத்தப்படுத்தி எண்ணி பார்த்ததில் சுமார் $3,550 கரன்சிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைத்தது.

    வரிசை எண்கள் (சீரியல் நம்பர்கள்) சேதமடையாத கரன்சிகள் அவர்களுக்கு வங்கியில் மாற்றி தரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட இழந்த தொகையில் பெரும் பகுதி அவர்களுக்கு திரும்ப கிடைத்தது.

    இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் லா தம்பதியினருக்கு செசில் மீதான அன்பு குறையவில்லை.

    சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து "நாய்க்கு இவ்வளவு விலையுயர்ந்த உணவா?" என பயனர்கள் கிண்டல் செய்து பதிவிடுகின்றனர்.

    • உறவுக்கார ஆணை, அந்த தந்தை துப்பாக்கியால் சுட்டார்
    • அவர் சுட்டதில் காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம்.

    நேற்று அங்குள்ள விட்டேகர் அவென்யு (Whitaker Avenue) 7500 பிளாக்கில் ஒரு வீட்டில் 18 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே ஒரு வீடியோ கேம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் தொடங்கியது. இதில் அவர்களின் ஒரு உறவுக்கார ஆணும் ஈடுபடும்படி ஆனது.

    வாக்குவாதம் சண்டையாக மாறியதில் அந்த 18 வயதிற்கு உட்பட்டவரும், உறவுக்கார ஆணும் வேறு ஒரு அறைக்கு சென்று விட்டனர். தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே அவர்களை தேடி கோபத்துடன் வந்த தந்தை, அந்த உறவுக்கார ஆணை, தன் துப்பாக்கியால் சுட்டு விட்டு அறைக்கு வெளியே சென்றார்.

    உடனடியாக சுடப்பட்ட அந்த ஆணும், அந்த 18 வயதிற்குட்பட்டவரும் அமெரிக்காவின் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ அழைத்தனர்.

    காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதிகாரிகள் வந்த போது, வீட்டின் முன்புறத்தில் இருந்த தந்தை, அதிகாரிகளை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் 2 அதிகாரிகளுக்கு கால்களிலும், ஒருவருக்கு கை விரலிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரை நோக்கி பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவுக்கார ஆண், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

    • இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக, மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர். இதையடுத்து, இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×