search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளம்பர்"

    • விசாலாட்சி, உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • குனியமுத்தூர் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 43). பிளம்பர்.

    இவரது மனைவி விசாலாட்சி (34). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து விசாலட்சி சரவணம்பட்டியில் வசிக்கும் அவரது தாய் உமாராணி (55) என்பவரிடம் கூறினார். அவர் நான் நேரில் வந்து பேசுகிறேன். எல்லாம் சரியாகி விடும் என்றார்.

    அதன்படி சம்பவத்தன்று இவர் தனது மருமகனிடம் கணவன்-மனைவிக்கு இடையே உள்ள கருத்துவேறுபாட்டை பேசி சரி செய்வதற்காக சென்றார். பேசிக் கொண்டு இருந்த போது உமாராணிக்கும், ஆனந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மாமியாரை வெட்டினார்.

    இதனை பார்த்த விசாலாட்சி தடுக்க சென்றார். அவரையும் ஆனந்தன் அரிவாளால் வெட்டினர். இதில் அவர்களுக்கு தலை மற்றும் உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. 2 பேரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். பின்னர் ஆனந்தன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விசாலாட்சி மற்றும் உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்த ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூல மாக சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
    • தலை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை

    கன்னியாகுமரி

    நாகர்கோவில் அருகே மாதவலாயம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு உசேன் அகமது கான் (வயது 41), பிளம்பர்.

    மோட்டார் சைக்கிள் மோதியது

    இவர் தற்பொழுது பறக்கை பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பாபு உசேன் அகமதுகான் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். சங்குத்துறை-மேல கிருஷ்ணன் புதூர் ரோட்டில் வந்து கொண்டி ருந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவ ரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பாபு உசேன் அகமது கான் தூக்கி வீசப்பட்டு படுகா யம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூல மாக சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தலை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த னர். எனினும் சிகிச்சை பலனின்றி பாபு உசேன் அகமதுகான் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மாமனார் முகமது ஜலால் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    பாபு உசேன் அகமது கான் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய பள்ளம் கோவில் தெருவை சேர்ந்த ஹஜித்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார்.
    • இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் லோகநாதன் (வயது 31). பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் லோகநாதன் வெளியே சென்றுள்ளார். ஆனால் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

    பிணமாக மீட்பு

    இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.

    இது குறித்த தகவலின் பேரில், இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த லோகநாதன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக இறந்து போன லோகநாதனின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொலையா?

    இதில், லோகநாதன் குடும்பத்தினருக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லோகநாதன் எவ்வாறு இறந்தார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்ப தன் வீட்டிற்கு திரும்பினார்.
    • எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பாபு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பஸ் ஸ்டாண்ட் தெருவைச் சேர்ந்தவர் பாபு (வயது45). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று பரிக்கல் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்திற்கு விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்ப தன் வீட்டிற்கு வரும் பொழுது பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பாபு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த பாபு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப் பதிந்து விசார ணை செய்து வருகின்றனர்.

    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நின்றிருந்த வாகனத்தை கவணிக்காமல் மோதி விபத்து

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மஞ்சனாவிளை பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ஆசீர் மனு வேல் (வயது33), பிளம்பர். இவருக்கு இன்னும் திருமண மாகவில்லை.

    கடந்த 11-ந் தேதி ஆசீர் மனுவேல் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றார். இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட அவர், முத்தளக்குறிச்சியில் வரும் போது கல்லுரி வாகனம் நின்றிருந்ததை கவனிக்கவில்லை.

    இதனால் எதிர்பாராத விதமாக அந்த வாகனத்தின் பின்புறம் ஆசீர்மனுவேல் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில்தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய மடைந்தார்.அவரைஅருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் ஆசீர்மனுவேல் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்ப ட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி இன்று அதிகாலை ஆசீர்மனுவேல் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக அவரது தாய் லில்லி பாய் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×