search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் மோதி பலி"

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சோமலாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது59). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாலு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த சென்னை சமுத்திரம் கிராம பெரிய தெருவில் வசித்து வந்தவர் மணி (வயது 67). இவர் நேற்று வாலாஜா பேட்டை அணைக்கட்டு ரோட்டில் வாலாஜாவை நோக்கி மோட்டார்சைக்கி ளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாப மாக இறந்து விட்டார்.

    இது குறித்து வாலாஜா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

    • சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் சாலையில் நடந்து வந்தனர்.
    • வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிரா மத்தைச் சேர்ந்த வர்கள் சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் மடப்பட்டு நோக்கி சாலையில் நடந்து வந்தனர். அப்போது திருக்கோவிலூ ரிலிருந்து மடப்பட்டு நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.அமல்தாஸ் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்ப தன் வீட்டிற்கு திரும்பினார்.
    • எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பாபு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பஸ் ஸ்டாண்ட் தெருவைச் சேர்ந்தவர் பாபு (வயது45). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று பரிக்கல் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்திற்கு விவசாய வேலைக்கு சென்று விட்டு திரும்ப தன் வீட்டிற்கு வரும் பொழுது பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பாபு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த பாபு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப் பதிந்து விசார ணை செய்து வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    பகுதியை வாணியம்பா டியை அடுத்த ஆலங்காயம் சேர்ந்தவர் ரவி மனைவி வள்ளி (வயது 45). இவர் ஆம் பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை முடித்துவிட்டு ஆம்பூரை அடுத்த செங்கிலிகுப் பம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×