என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி தொழிலாளி பலி
    X

    வாகனம் மோதி தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சோமலாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது59). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாலு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×