search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானிசாகர் பூங்கா"

    • வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன.
    • அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 1-ந் தேதி முதல் விடு முறை விடப்பட்டு உள்ளது. மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமியை யொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    கோபி செட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரு வார்கள். மேலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று ஆயுதபூஜையை யொட்டி பல்வேறு பகுதி களில் இருந்தும் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விஜய தசமி நாளான இன்று காலை பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்திரு ந்தனர். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல மக்க ளின் கூட்டம் அலை மோதி யது. அவர்கள் தடுப்பணை யில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வாலிபர்கள் பலர் வந்து தடுப்பணையில் குளித்து குதூகளித்தனர். இனால் தடுப்பணையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்கப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் தொடர் விடுமுறையால் பவானி சாகர் அணை பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை முதலே ஏராளமான பொது மக்கள் பூங்காவை கண்டு கழித்தனர். அணைக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து ரசித்தனர். இதனால் பூங்கா முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்த னர். தொடர்ந்து பொது மக்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர். மேலும் பூங்கா பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் சாப்பிட்டனர்.

    இதே போல் பவானி கூடுதுறைக்கும் இன்று பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்ம னை வழிபட்டு சென்றனர்.

    ×