search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிவேரி"

    • தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
    • விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கி றார்கள்.

    இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை முதலே பொதுமக்கள் பலர் வந்து சென்றனர். இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழ மை) விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.

    ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிகளவில் வந்திருந்தனர். மேலும் இளைஞர்கள் உள்பட பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வந்தனர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள்.
    • கடந்த 3 நாட்களாக கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகமான பொது மக்கள் வந்து குவிந்தனர்.

    கோபி, 

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொது மக்கள் வருவார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் இந்த தடுப்பணை யில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். இதனால் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள்.

    இந்த நிலையில் தொட ர்ந்து விடுமுறை விடப்ப ட்டதால் கடந்த 3 நாட்களாக கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து குவிந்தனர்.

    கடந்த 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு, நேற்றுமுன் தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 3 நாட்கள் கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் கொடிவேரி பகுதியில் கடந்த 3 நாட்களாக எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக இருந்து வந்தது.

    இதே போல் நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்தி ருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்க த்தை தணிப்பதற்காக இளை ஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    கூட்டம் அதிகமாக காணப்ப ட்டதால் குழந்தைகளை அழைத்து வந்த பொது மக்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் தடுப்பணையில் ஓரமாக நின்று குளித்து விட்டு சென்றனர். இதை யொட்டி ஏராமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 17 ஆயிரத்து 500 பேர் கெடிவேரிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ.87 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இதனால் நேற்று கொடிவேரி தடுப்பணையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து குளித்து செல்கிறார்கள்.

    கோபி,

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    இதையொட்டி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து குளித்து செல்கிறார்கள்.

    இதே போல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் ஏராளமானோர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் நேற்று கொடிவேரி தடுப்பணையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    நேற்று ஒரே நாளில் சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    இதன் மூலம் ரூ.32 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 1-ந் தேதி முதல் விடு முறை விடப்பட்டு உள்ளது. மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமியை யொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    கோபி செட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரு வார்கள். மேலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று ஆயுதபூஜையை யொட்டி பல்வேறு பகுதி களில் இருந்தும் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விஜய தசமி நாளான இன்று காலை பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்திரு ந்தனர். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல மக்க ளின் கூட்டம் அலை மோதி யது. அவர்கள் தடுப்பணை யில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வாலிபர்கள் பலர் வந்து தடுப்பணையில் குளித்து குதூகளித்தனர். இனால் தடுப்பணையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்கப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் தொடர் விடுமுறையால் பவானி சாகர் அணை பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை முதலே ஏராளமான பொது மக்கள் பூங்காவை கண்டு கழித்தனர். அணைக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து ரசித்தனர். இதனால் பூங்கா முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்த னர். தொடர்ந்து பொது மக்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர். மேலும் பூங்கா பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் சாப்பிட்டனர்.

    இதே போல் பவானி கூடுதுறைக்கும் இன்று பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்ம னை வழிபட்டு சென்றனர்.

    ×