search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barrage in a single day"

    • இதனால் நேற்று கொடிவேரி தடுப்பணையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து குளித்து செல்கிறார்கள்.

    கோபி,

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    இதையொட்டி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து குளித்து செல்கிறார்கள்.

    இதே போல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் ஏராளமானோர் தங்கள் குடும்ப த்தினருடன் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் நேற்று கொடிவேரி தடுப்பணையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    நேற்று ஒரே நாளில் சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    இதன் மூலம் ரூ.32 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×