search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodiveri"

    • ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது.

    கோபி:

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக நீர்நிலைகள் மற்றும் குளுகுளு பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் கார், பஸ், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரிக்கு வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக கொடிவேரி பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் சுமார் 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இதன் காரணமாக கடுமையான கூட்டம் அலைமோதியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களையும் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

    பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டே இருந்தது.

    • விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது கொடிவேரி அணை.இதே போல் சிறந்த பரிகார தலமாக உள்ளது பவானி கூடுதுறை.

    கொடிவேரி அணையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    இதேபோல் பவானிசாகர் அணை பூங்காவுக்கும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணையின் அழகை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் பண்ணாரியம்மன் கோவிலுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்திருந்தனர்.மேலும் திம்பம், தாளவாடி, பர்கூர் மலைபகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்கண்டு ரசித்தனர்.

    இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.

    இதேபோல் வெளியூர்களில் இருந்தும்ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும்,தர்ப்பணம் செய்தும் சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 1-ந் தேதி முதல் விடு முறை விடப்பட்டு உள்ளது. மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமியை யொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    கோபி செட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரு வார்கள். மேலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று ஆயுதபூஜையை யொட்டி பல்வேறு பகுதி களில் இருந்தும் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விஜய தசமி நாளான இன்று காலை பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்திரு ந்தனர். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல மக்க ளின் கூட்டம் அலை மோதி யது. அவர்கள் தடுப்பணை யில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வாலிபர்கள் பலர் வந்து தடுப்பணையில் குளித்து குதூகளித்தனர். இனால் தடுப்பணையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்கப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதே போல் தொடர் விடுமுறையால் பவானி சாகர் அணை பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை முதலே ஏராளமான பொது மக்கள் பூங்காவை கண்டு கழித்தனர். அணைக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து ரசித்தனர். இதனால் பூங்கா முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்த னர். தொடர்ந்து பொது மக்கள் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்தப்படி சென்றனர். மேலும் பூங்கா பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் சாப்பிட்டனர்.

    இதே போல் பவானி கூடுதுறைக்கும் இன்று பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்ம னை வழிபட்டு சென்றனர்.

    கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎன்.பாளையம்:

    திருப்பூரை சேர்ந்தவர் முகமது சேக் அப்துல் மகன் முகமது சதாக் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று அரசு விடுமுறை என்பதால் முகமது சதாக், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் பிலால் (29) என்பவருடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தார். கொடிவேரி அணையில் இருவரும் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முகமது சதாக் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை பங்களா புதூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மாணவனின் உடலை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அணையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் அணையில் மூழ்கி பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×