என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
டிஎன்.பாளையம்:
திருப்பூரை சேர்ந்தவர் முகமது சேக் அப்துல் மகன் முகமது சதாக் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
நேற்று அரசு விடுமுறை என்பதால் முகமது சதாக், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் பிலால் (29) என்பவருடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தார். கொடிவேரி அணையில் இருவரும் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முகமது சதாக் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று காலை பங்களா புதூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மாணவனின் உடலை தேடி வந்தனர்.
இதற்கிடையே அணையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் அணையில் மூழ்கி பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்