search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
    X

    கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி

    கொடிவேரி அணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎன்.பாளையம்:

    திருப்பூரை சேர்ந்தவர் முகமது சேக் அப்துல் மகன் முகமது சதாக் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று அரசு விடுமுறை என்பதால் முகமது சதாக், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் பிலால் (29) என்பவருடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தார். கொடிவேரி அணையில் இருவரும் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முகமது சதாக் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை பங்களா புதூர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மாணவனின் உடலை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அணையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் அணையில் மூழ்கி பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×