search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளம்"

    • சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.
    • சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமத்தை சூழ்ந்து சாலையையும் அரித்து துண்டித்துவிட்டது.

    மேலும் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதனையறிந்த பூம்புகார் எம்.எல்.ஏ.வும், தி.மு.க மாவட்ட செயலாளருமான நிவேதா.முருகன் நாதல்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேதமடைந்து துண்டிக்கப்–பட்ட சாலை மேம்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து சாலையை தற்காலிகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஜே.சி.பி எந்திரம் கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் எடுத்து வரப்பட்டு சாலையின் நடுவில் போட்டு சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை அடைக்கும் பணி நடைபெற்றது.

    கிராமத்துக்கு செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக தற்காலிகமாக சாலையை சீராக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இது குறித்து நிவேதா.முருகன் எம்.எல்.ஏ. கூறும்போது:-

    நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலை தண்ணீரில் அரித்துச் செல்லப்பட்டு விட்டதால் சாலையை தற்காலிகமாக மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பின்னர் அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிரந்தரமாக சாலை மேம்படுத்தப்படும் என்றார்.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பி. டி. ஓ. அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பூரணச் சந்திரன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்ல சேது ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன.
    • கவனக்குறைவு ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

    பூதலூர், அக்.9-

    திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கோவில்பட்டி வழியாக கல்லணை செல்லும் சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக கும்பகோணத்தில் இருந்தும் மயிலாடுதுறையில் இருந்தும் திருச்சிக்கு ஏராளமான கார்கள் சென்று வருகின்றன.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் விளைப்பொருட்கள் பலவும் லாரிகள் மூலமாக திருச்சி மார்க்கெட் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாலை அகலப் படுத்தப்பட்டு விட்டதால் இரண்டு சக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. கோவிலடி அருகே அரசு மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகளும் குறுக்கு நடுக்குமாக சென்று வருகின்றன.

    இந்த நிலையில் சுக்காம்பர் அருகே அண்மையில் பெய்த மழையால் சாலையின் ஓரத்தில் தொடர்ந்து பெரிய அளவில் அரிப்பு ஏற்பட்டு மூன்று பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. எதிர் புதிருமாக லாரிகள் வரும் நேரத்தில் சற்று கவனக்–குறைவாக ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

    அதுபோல இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர் சற்று கவனம் பிசகினாலும் சாலையோர பள்ளத்தில் விழுந்துவிடும் அபாய நிலை உள்ளது.

    தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிப்பு ஏற்படுவது எப்படி என்பதை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள்.
    • பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

    கவுன்சிலர் சரவணன்:

    சீனிவாசபுரம் ராஜாஜி ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

    கவுன்சிலர் கோபால்:

    4 ராஜ வீதிகளிலும் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் பணி முடியவில்லை.

    இதன் காரணமாக பலர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.

    கவுன்சிலர் கண்ணுக்கினியாள்:

    மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ஜெய் சதீஷ்:

    மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள். மத்திய அரசு ஒருபோதும் மின் கட்டணத்தை உயர்த்துமாறு கூறவில்லை.

    மாநில அரசுதான் உயர்த்தி உள்ளது.

    எனது வாடுக்கு உட்பட்ட பழைய ராமேஸ்வரம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது.

    உடனடியாக பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டுக்கு உட்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    முன்னதாக கூட்டத்தில் ஏற்கனவே 22 கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண் .ராமநாதன் பேசும்போது:-

    மத்திய அரசு மானியம் உள்ளிட்ட நிதிகளை தர மாட்டோம் என கூறியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
    • இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது.

    பவானி:

    பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வகையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்த பாலத்தின் வழியாக தினசரி மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நடைபெற்ற வண்ணம் இருக்கும்.

    இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுதாரித்து கொள்ளும் நிலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
    • அப்பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ- மாணவிகளும், வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால், மழை நீர் சாலைகளில் ஆறு போல ஓடியது.

    கனமழையின் காரணமாக, சாலைகளில், உள்ள பள்ளங்களில், மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.

    நல்லமாங்குடி, அக்ரஹாரத்தில் தெருவிற்கு செல்லும் சாலை முன்பாக, மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    சாலை வழியாக, அரசு பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும், அரசு மாணவர் விடுதிக்கும், செல்ல வேண்டும்.

    மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    பள்ளி குழந்தைகள், தேங்கி நிற்கும் மழை நீரில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுது, சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதும், அதனால் அந்தப் பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ மாணவிகளும் வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

    இந்தச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் உடனடியாக வடியும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • திட்டக்குடி அருகே சாலை ஓர பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்தது.
    • 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கலந்து விபத்து அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மாணவ மாணவிகள் உயிர் தப்பினர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஐவனூர் ,ஆலம்பாடி சாலையில் கழுதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி பஸ் நெடுங்குளம், சிறுமுளை, பெருமுளை, புலிவலம், ஐயவனூர், ஆலம்பாடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் பெருமுளை கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு பஸ் ஓட்டி வந்தார். கனகம்பாடி கிராமம் அருகே பஸ் அதிவேகமாக சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் மாணவ- மாணவிகள் அலறினர். சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடிவந்தனர். விபத்தில் சிக்கிய மாணவ மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தல் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர் . தகவலறிந்து வந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோழவரம் அருகே உள்ளது இருளிபட்டு சத்திரம் கிராமம்.
    • பள்ளத்தை சரியான முறையில் உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ளது இருளிபட்டு சத்திரம் கிராமம். இன்று காலை அப்பகுதியில் மீஞ்சூர்-நெகநாதபுரம் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

    இந்த பள்ளம் ஆழ்துளை கிணற்று பள்ளமாக இருக்கலாம் என்று தெரிகிறது. குடியிருப்பு அருகே சிறுவர், சிறுமிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பொதுமக்கள் பள்ளத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இந்த பள்ளத்தை சரியான முறையில் உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பள்ளம் 100 அடிக்கும் கீழ் சென்றது. ஆழ்துறை கிணறுக்காக போடப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாமல் அதன் மேல் சாலை அமைத்து உள்ளனர்.

    இந்த சாலை 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த ஆழ்துளை கிணற்று பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×