search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த மழை"

    • செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது
    • கலசபாக்கத்தில் 75.40 மி.மீ மழை பதிவாகியது

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.

    இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதில் திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 38.20, போரூரில் 18.80, ஜமுனாமரத்தூரில் 20, கலசபாக்கத்தில் 75.40, தண்டராம்பட்டில் 15.60, ஆரணியில் 18.60, செய்யாறில் 35, வந்தவாசியில் 32, கீழ்பெண்ணாத்தூரில் 33.20, வெம்பாக்கத்தில் 35, சேத்துப்பட்டு 72.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 359.1 மி.மீ.,
    • விடிய விடிய கொட்டி தீர்த்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நேற்று நள்ளிரவிலிருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் மழைதூறல் பெய்த வண்ணம் உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்:-

    ராணிப்பேட்டையில் 67.8.மி.மீ., பாலாறு அணைக்கட்டு 14.8 மி.மீ., வாலாஜாவில் 42.5 மி.மீ., அம்மூரில் 41 மி.மீ., ஆற்காட்டில் 92.6.மி.மீ., மின்னலில் 8.4 மி.மீ., காவேரிப்பாக்கத்தில் 43 மி.மீ., பனப்பாக்கத்தில் 2.8 மி.மீ., கலவையில் 46.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 359.1 மி.மீ., மாவட்ட சராசரி 32.6 5மி.மீ.ஆகும்.

    • ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • மழை நின்ற பிறகு அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டததில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சாரல் மலை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்து வந்தது. இதை தொடர்ந்து மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இதையடுத்து சிறிது நேரத்தில் லேசாக சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதில் அந்தியூர்- அத்தாணி சாலையில் கெட்டி விநாயகர் கோவில் அருகே ரோட்டோரமாக இருந்த வேப்ப மரம் பலத்த காற்றால் முறிந்து ரோட்டில் விழுந்தது.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகள் அதிகளவில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனால் அந்தியூர்- அத்தாணி ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி செல்லக்கூடிய பஸ்கள், அத்தாணியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய பஸ்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். சுமார்1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மழை நின்ற பிறகு அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    • சராசரி 43.65 மி. மீ. மழை பதிவாகி உள்ளது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுறம், செட்டியப்பனூர், நியூடவுன், கச்சேரி சாலை, கொடையாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திடீரென பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராணிப்பேட்டை

    இதேபோல ராணிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    பின்னர் இரவு சுமார் 7 மணியிலிருந்து திடீரென பலத்த மழை பெய்தது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்: ராணிப்பேட்டையில் 64.6.மி.மீ, பாலாறு அணைக்கட்டு 34.2 மி.மீ, வாலாஜாவில் 72 மி.மீ, அம்மூரில் 42.மி.மீ,ஆற்காட்டில் 74.2.மி.மீ, அரக்கோணத்தில் 62.4.மி.மீ, மின்னலில் 8.2.மி.மீ, காவேரிப்பாக்கத்தில் 34 மி.மீ, பனப்பாக்கத்தில் 24.8 மி.மீ, சோளிங்கரில் 21 மி.மீ, கலவையில் 42.8மி. மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 480.2மி.மீ., , மாவட்ட சராசரி 43.65 மி. மீ. மழை பதிவாகி உள்ளது.

    • 200 பாசன குளங்கள் நிரம்பியது
    • திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் பர வலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இடை விடாது மழை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.

    கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கொட்டா ரத்தில் அதிகபட்சமாக 14.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்க ளில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்களில் 200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டிய நிலையில் தற்பொழுது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.46 அடியாக உள்ளது. அணைக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.50 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 2.6, களியல் 3, கொட்டாரம் 14.2, குழித்துறை 4.2, மயிலாடி 10.2, நாகர்கோவில் 5.2, புத்தன்அணை 3, தக்கலை 1.4, குளச்சல் 6, இரணியல் 8.4, பாலமோர் 1.4, மாம் பழத்துறையாறு 2, அடையா மடை 4.2.

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
    • நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்ததால், சாலைகளில் மழைநீர்பெருக்கெடுத்து ஓடியது. பஸ் பயணிகளும், பொதுமக்களும் குடைபிடித்த வாறு சென்ற னர்.இந்த மழை யின் காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கோழிப்போர்விளையில் 70.5 மில்லி மீட்டர் பதிவு
    • சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பாசன குளங்களிலும், அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தக்கலை கோழிபோர்விளை பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 70.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மாம்பழத்துறை யாறு, அடையாமடை, ஆணைக்கிடங்கு, கன்னி மார், களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவி லில் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    களியல் 1.2, கன்னிமார் 2.2, குழித்துறை 2.2, குழித்துறை 29.4, நாகர்கோவில் 22.2, தக்கலை 70.3, பாலமோர் 9.2, மாம்பழத்துறையாறு 44.2, கோழிபோர்விளை 70.5, அடையாமடை 57.2, ஆணைகிடங்கு 41.2,

    அணை பகுதியில் போதுமான அளவு மழை பெய்யவில்லை.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.36 அடியாக இருந்தது. அணைக்கு 478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 28.70 அடியாக உள்ளது. அணைக்கு 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.10 அடியாகவும், மாம்பழத்துறை யாறு நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு மாவட்டத்துக் குட்பட்ட கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் மழை கண்ணா மூச்சி காட்டி வருகிறது. இந்த பகுதிகளில் நேற்றும் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை. இன்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது.

    • மின் கம்பங்கள் சாய்ந்தது
    • மின் சப்ளை பாதிப்பால் மக்கள் அவதி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மின் சப்ளை நிறுத்தம் செய்யப்பட்டது. மழை நின்ற பின்னர் மின் சப்ளை தரப்பட்டது.

    ஆனால் மழையுடன் பலத்த காற்று வீசியபோது போலீஸ் குடியிருப்பு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்சார வயர்க ளின் மீது விழுந்ததால் சில மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

    இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சப்ளை பாதிக்கப்பட்ட தாக பொதுமக்கள் தெரிவித்தனர்

    வெயிலின் தாக்கத்திற்கு பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராணிப்பேட்டை 24.6, பாலாறு அணைக்கட்டு 28, வாலாஜா 18.8, ஆற்காட்டு 24.8, கலவை 8.2 அளவு மழை பெய்துள்ளது.

    • சில இடங்களில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிர்கள் காய்ந்து போனது.
    • பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கடலூர்:

    பண்ருட்டி பங்களா தெரு பிள்ளையார் கோவில் அருகில் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து புதுப்பேட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் முருகன் (வயது 20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு உள்ளிட்ட 91 லாட்டரி சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

    • பாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இங்கு 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மலை மாநிலங்களில் பருவ மழை வழக்கத்தைவிட அதிகமாக கொட்டி வருகிறது.

    இமாச்சல்பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இமாசலபிரதேசத்தின் மண்டி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டியதில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அதை தொடர்ந்து 2-வது கொட்டமாக தொடர்மழை கொட்டி வருகிறது.

    தலைநகர் சிம்லாவில் மழையினால் தொடர்ந்து பேரழிவு ஏற்பட்டு வருகிறது. மழையினால் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. சிம்லா கிருஷ்ணா நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். 5 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிம்லாவின் லால்பானி பகுதியில் மரங்கள் விழுந்ததில் இறைச்சி கூடம் மற்றும் பிற கட்டிடங்கள் சேதமடைந்தன. மழை காரணமாக இந்த கட்டிடம் சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது.

    ஏற்கனவே சிம்லா சம்மர் ஹில்ஸ் பகுதியில் கனமழையால் சிவன் கோவில் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். தற்போது மேலும் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். 4 நாட்கள் ஆகியும் அவர்கள் மீட்கப்படவில்லை. பாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இங்கு 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    சோலான், ஜடோன், பலேரா ஆகிய கிராமங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பானல் கிராமத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிம்லாவில் ஏற்பட்ட 2 நிலச்சரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டன. பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மழையால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். வீட்டில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனுடன், சிம்லா உள்ளிட்ட மழை பெய்யும் பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இமாச்சல பிரதேசத்தில் டேராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு மற்றும் கன மழையால் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த மாதம் ஜூன் 24 ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை, ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் ரூ.6,807 கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகளில் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே பருவநிலை மாற்றத்தின் கீழ், சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்து உள்ளது. கன மழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் யமுனா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளான கின்னவுர், சிம்லா, குலு, மண்டி, பிலாஸ்பூர் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகள் பஞ்சாப் மற்றும் அரியானா வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த மழையால் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளனர். கனமழையின் காரணமாக, மத்மகேஷ்வர் நடை பாதையில் பந்தோலி அருகே நடை பாதை பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ருத்ரபிரயாக்கில், கோவிலுக்குச் செல்லும் 2-வது கேதார் மத்மகேஷ்வர் பாதையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 250 பக்தர்களில் 40 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் காரணமாக, கவுண்டர் கிராமம், தெஹ்சில், உகிமத் மற்றும் ருத்ரபிரயாக் ஆகியவற்றுடன் 2-வது கேதார் மத்மஹேஷ்வரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டூனின் சஹஸ்ரதாராவில் 72 ஆண்டுக்கு பின்னர் கன மழை பெய்துள்ளது. சஹஸ்ரதாராவில் 251 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேசமயம், கடந்த 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி 332.2 மி.மீ., மழை பெய்ததே இதுவரை சாதனையாக இருந்தது. சஹஸ்ரதாராவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டிருப்பது அதிக மழை பெய்ய காரணம் என்கின்றனர் வானிலை அதிகாரிகள்.

    டேராடூனில் மொத்தம் 175.1 மிமீ மழை பெய்துள்ளது, இது இயல்பை விட சுமார் 1000 சதவீதம் அதிகமாகும்.

    இதனிடையே டெஹ்ராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய இடங்களில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் உத்தரகாண்டின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளின் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. சார்தாம் யாத்திரைக்கு வரும் மக்கள் வானிலை நிலையைப் பார்த்த பின்னரே மாநிலத்திற்கான பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. லேசான சாரல் மழையாக தொடங்கி பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு பொன்னானி, சேரம்பாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை குறைந்து மிதமான அளவில் வெயில் அடித்து வந்தது.

    நேற்று காலையும் வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு காலநிலை முற்றிலும் மாறி இதமான காலநிலையே நிலவி வந்தது.

    சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. லேசான சாரல் மழையாக தொடங்கி பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், பந்தலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டியில் திடீரென கொட்டி தீர்த்த மழையால், சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டனர். வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே சென்று வந்தனர்.

    மழைக்கு கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்றது. மேலும் ஊட்டி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    இதேபோல் மழைக்கு சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து, அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    இந்நிலையில், கோத்தகிரி-ஊட்டி சாலையில், மடித்தொரை கிராமம் அருகே 2 ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

    இதில் அந்த சாலையில் பெரியளவில் பள்ளம் ஏற்பட்டு, முற்றிலும் சேதம் அடைந்தது. போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் பாறை விழுந்ததால் சாலையில் ஏற்பட்டிருந்த சேதங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

    கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மழையுடன் கடும் பனிப்பொழிவு, மேகமூட்டமாகவும் காணப்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

    கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு பொன்னானி, சேரம்பாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அய்யன்கொல்லி அருகே எலியாஸ் கடை வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை வெள்ளம் நிரம்பி குளம்போல் காட்சி அளித்தது.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • தண்டராம்பட்டில் 52.60 மி.மீ பதிவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 100 டிகிரி வரை வெயிலில் தாக்கம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று, தொடர்ந்து லேசான சாரவ் மழை பெய்ய தொடங்கியது அதன் பிறகு பரவலாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கின.

    இதில் அதிகபட்சமாக தண்டராம்பட்டு பகுதியில் 52.60 மில்லி மீட்டர், வெம்பாக்கம் 33 மில்லி மீட்டர், செய்யார் 13 மில்லி மீட்டர், வந்தவாசி 12 மில்லி மீட்டர், திருவண்ணாமலை ,கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் 8 மில்லி மீட்டர், ஆரணி 5 மில்லி மீட்டர், போளூர் 4.40 மில்லி மீட்டர், ஜமுனாமுத்தூர் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 138 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    மழை பெய்யததால் பொதுமக்கள, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×