search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலத்த மழை"

    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
    • இதன் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்தன. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், ஜங்ஷன், ரெயில் நிலையம் சாலை போன்று ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை மழை வெள்ளத்துடன் தாமிரபரணி ஆற்று நீரும் சேர்ந்து மூழ்கடித்தன. இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

    மீட்புப்படையினர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். திருநெல்வேலி புறநகர் பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல் சென்றது.

    இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளத்தின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.

    நேற்று காலை ஆற்றை மூழ்கடித்து சென்ற வெள்ளம் இன்று சுமார் 15 அடி குறைந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்யாவிடில், மாலைக்குள் நீர் வடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பல இடங்கள் தீவு போல் மாறியுள்ளது. அந்த இடங்களில் இருந்து மீட்புப்படையினர் படகு மூலம் மக்களை வெளியேற்றினர். இரவு பகலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    • தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. சாலைகள், தெருக்களில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்துள்ளது.

    காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 66.9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 60.70 செ.மீ. மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், பாளையங்கோட்டையில் 42.0 செ.மீ. மழையும, அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    • அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
    • மணிமுத்தாறில் 31.70 செ.மீட் மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை 4.30 நிலவரப்படி 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 31.70 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    தற்போதும் மழை பெய்து வருவதால் அம்பையில் உள்ள மணிமுத்தாறு அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 86.66 அடி உயரமாக இருந்த நிலையில், ஒன்று ஒரே நாளில 108.8 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு தற்போது 17 அயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் 143.6 அடி உயரம் கொண்டி கரையாறு அணையில் 133 அடி உயரமாக நீர்மட்டம் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த மூன்று அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த மூன்று அணைகளிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • தண்டவாளங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் ரெயில்கள் இயக்க முடியாத நிலை.

    திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினத்தில் இருந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. கோவில்பட்டியில் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக உள்ளது.

    இதனால் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியிலும் குளம்போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை- நெல்லை, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நிஜாமுதீன்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் விரைவு ரெயில் ஆகியவை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சாத்தூர் ரெயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் ரெயில் பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    • தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றனர்.
    • மழைக்குப் பிறகு நகரின் பிடிஎம் லேஅவுட் பகுதிகளில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூர்:

    பெங்களூர் ஹலசூரில் உள்ள கென்சிங்டன் சிக்னல் சந்திப்பு அருகே இரவு 8 மணி அளவில் திடீரென 10 அடி ஆழத்தில் சிமெண்ட் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நில நடுக்கம் ஏற்பட்டிருக்குமோ? என பீதி அடைந்தனர்.

    பரபரப்பான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்புக்காக அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் பொதுமக்கள், வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடாதபடி சுற்றிலும் பேரிகார்டர் அமைத்து, எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது.

    இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு இந்த சிமெண்ட் சாலை போடப்பட்டது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நில நடுக்கம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் பலத்த மழைக்குப் பிறகு நகரின் பிடிஎம் லேஅவுட் பகுதிகளில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலை ஓரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் திருப்ப த்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூர் அடுத்த கந்திலி, கெஜல்நாயக்கன்பட்டி, தோக்கியம், கரியம்பட்டி, சின்னகந்திலி, நார்ச்சாம்பட்டி, பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி சுமார் 1½ மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • 2 ஆண்டு களுக்கு பின்பு கன மழை பெய்ததாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிலக்கோட்டை பகுதியில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி சுமார் 1½ மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இடி, மின்னல் அதிகமாக இருந்ததால் மின் தடை ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    2 ஆண்டு களுக்கு பின்பு கன மழை பெய்ததாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த னர். சிறுவர், சிறுமியர் இடி சத்தத்தை கேட்டு பயந்து நடுங்கினர். மேலும் நிலக்கோட்டை நீதிமன்றம், கிராமம் நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம், அணைப்பட்டி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.

    தற்போது மழை காலமாக இருப்பதால் ஆங்காங்கே உள்ள சாக்கடைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, செம்பட்டி, கன்னிவாடி, பழனி, வேட சந்தூர், ஒட்டன்சத்திரம், வடமதுரை, அய்யலூர், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    கொடைக்கானல் ரோஸ் கார்டன் 16, பூங்கா 14, சத்திரப்பட்டி 7, நிலக்கோ ட்டை 16, வேடசந்தூர் 30.5, புகையலை ஆராய்ச்சி நிலையம் 29.6, காமாட்சிபுரம் 45.80 என மாவட்டம் முழுவதும் 158.90 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • மரம் பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்து விட்டது.

    ஈரோடு, நவ. 4-

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. அதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் மதிய நேரத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மாலை மற்றும் இரவில் சாரல் மழை பெய்தது.

    இதே போல் சத்தியமங்க லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தாலும் மாலை நேரத்தில் மேக மூட்டத்துடனேயே காணப் பட்டது.

    இதை தொடர்ந்து சத்திய மங்கலம், பண்ணாரி, ராஜன் நகர், சிக்கரசம் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதையடுத்து விடிய, விடிய பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.

    மேலும் வன்பகுதிகளான தாளவாடி, தலமலை பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பசுமையாக காணப்பட்டது.

    இதே போல் அந்தியூர், தவிட்டுபாளையம், சின்ன தம்பி பாளையம், வரட்டுப் பள்ளம் அணைப்பகுதி மற்றும் பர்கூர் பகுதிகளிலும் நள்ளிரவில் பரவலாக மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பர்கூர் மலை பகுதியில் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது.

    நம்பியூர், எலத்தூர், குரு மந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் பவானிசாகர் கோபி, கொடுமுடி, குண்டேரி பள்ளம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    சென்னிமலை பகுதியில் காலையில் வெயில் அடித்தது மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 4.20 மணிக்கு திடீர் என இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மின்னல், இடியுடன் பலத்த காற்று வீசியது.

    இதில் சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையம் அருகே சென்னிமலை-கே.ஜி.வலசு செல்லும் ரோட்டில் ரோட்டின் ஓரமாக இருந்த மரம் பலத்த காற்றால் சாய்ந்து ரோட்டில் விழுந்து விட்டது. இதனால் இந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் அறிந்து சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் 40 நிமிடங்களில் மரத்தினை துண்டாக்கி அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இருந்த இடையூறுகளை சரி செய்தனர். இந்த பலத்த காற்று வீசியதில் பல இடங்கில் சிறிய மரங்களும் முறிந்தும், சாய்ந்தும் விழுந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    பவானிசாகர்-28, கொடி வேரி-26, சத்தியம ங்கலம்-19. நம்பியூர்-16, குண்டேரி பள்ளம்-14.20, மொட க்குறிச்சி-10, கொடுமுடி-10, கோபி-9.20, வரட்டுப்ப ள்ளம்-8.70, சென்னி மலை-4, ஈரோடு-1.

    • 4 மணியில் இருந்து இடி முழக்கத்துடன் கன மழை பெய்ய தொடங்கியது
    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

    பெருமாநல்லூர் : 

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், கணக்கம் பாளையம், பூலுவபட்டி, மலையம்பாளையம், தொரவலூர், செங்கப்பள்ளி, குன்னத்தூர் மற்றும் ஊத்துக்குளி ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை கொட்டியது. காலை முதல் வெயில் லேசாக அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் கரு மேகம் இருள தொடங்கியது. பின்னர் மாலை 4 மணியில் இருந்து இடி முழக்கத்துடன் கன மழை பெய்ய தொடங்கியது. காற்றும் பலமாக வீசியது. அத்துடன் மழை விடாமல் தொடர்ந்து கிட்டத்தட்ட சுமார் 2 மணி பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் உள்ள காட்டன் மார்க்கெட் அருகில் 5 அடி உயரத்திற்கு மழைநீர் நிரம்பி ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே உள்ள பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கினர். வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. இந்த வடகிழக்கு பருவமழை காலங்களில் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக இந்த மழை காலங்களில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணி அளவில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. சமீபத்தில் தான் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவை தூர்வாரப்பட்டது. இதன்காரணமாக மழைநீர் தடையின்றி பாய்ந்தது.

    கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது. திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் 3 வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஊத்துக்குளி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாக பனைமரம் தீப்பற்றி எரிந்தது.பலத்த மழையிலும் பச்சை மரம் தீப்பற்றி எரிவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-55, கலெக்டர் முகாம் அலுவலகம் -68.50, திருப்பூர் தெற்கு அலுவலகம்-12,கலெக்டர் அலுவலகம்-113, அவினாசி தாலுகா அலுவலகம்-17, ஊத்துக்குளி தாலுகா அலுவலகம்-32, தாராபுரம்-42, மூலனூர்-36, குண்டடம்-25, உப்பாறு அணை-12, நல்லதங்காள் ஓடை-6, அமராவதி அணை-2, திருமூர்த்தி அணை-12, திருமூர்த்தி அணை ஐபி-11, காங்கயம்-33, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலகம்- 52, வட்டமலை கரை ஓடை- 31.40, பல்லடம்-6. மாவட்டம் முழுவதும் மொத்தம் 565.90 மி.மீ., மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூர் மாநகரில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் சிதலமடைந்த சாலைகள் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.  

    • வாகன ஓட்டிகள் அவதி
    • ஏலகிரி மலையில் பலத்த மழை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகள் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையின் காரணமாக ஏலகிரி மலையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்தத திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பாறைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்
    • பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அடுத்த வாலாட்டியூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது.

    2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்த போதும், கொடி மரத்தில் ஏற்றப்பட்ட விளக்கு அணையவில்லை.

    மேலும் விளக்கில் மழைநீர் நிரம்பி எண்ணெய்யுடன் கலந்து தொடர்ந்து விளக்கு அணையாமல் எரிவதை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மேலும் அந்த கிராம மக்கள் சாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டனர்.

    ×