search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Rain"

    • பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
    • கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    திருப்பதி:

    பருவ மழை காரணமாக கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    கிராமங்களில் இருந்த கால்நடைகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். மழை பெய்வது படிப்படியாக குறைந்ததால் அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி மற்றும் துங்கபத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் சென்றதால் போலவரம், மற்றும் கபிலேஸ்வரம் பகுதிகளில் உள்ள 100-கணக்கான கிராமங்களில் மழை வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்தது. இடுப்பளவுக்கு மேல் மழை வெள்ளம் செல்வதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏற்கனவே கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோதாவரி ஆற்றில் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 7 நாட்களாக குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    மழை வெள்ளத்தில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்டவை வீடுகளுக்கு புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டத்தில் 3 பேரும், ஏலூர் மாவட்டத்தில் ஒருவரும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஒருவரை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதே போல் நேற்று கோதாவரி மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் மாணவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆந்திரா, தெலுங்கானா மாநில எல்லையான சீதா ராமராஜ் மாவட்டத்தில் தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உடல்களை மீட்டனர்.

    தெலுங்கானாவில் 13 மீட்பு குழுவும் ஆந்திராவில் 10 மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோதாவரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நர்சாபுரம், எலமஞ்சிலி, அச்சந்த மண்டலம், ஏலூர் மாவட்டத்தில் குக்கனூர், வேளேறுபாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    அந்தப் பகுதிகளில் உணவு, பால், ரொட்டி, பிஸ்கட், குடிநீர், குளோரின் மாத்திரைகள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்டவைகள் இந்திய கடற்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மீட்புப் பணிகளில் 120 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மழை வெள்ளம் பாதித்த இடங்களை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி சேதங்களை பார்வையிட வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
    திருப்பதி:

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.

    இதன் காரணமாக மேலும் அதிக அளவு மழை பெய்தது. இதனால் சித்தூர், கடப்பா, நெல்லூர், ஆனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் ஆட்கள், கால்நடைகள், வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள் சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. இதனால் ஆந்திர மாநில அரசுக்கு ரூ.6,054 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 18,19-ந் தேதிகளில் சித்தூர் கடப்பா நெல்லூர் அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலத்த சேதமடைந்துள்ளது.

    மழை வெள்ளம் பாதித்த இடங்களை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி சேதங்களை பார்வையிட வேண்டும். தற்போது ஆந்திர மாநில அரசுக்கு வெள்ள சேத நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலியாகியுள்ளனர். 25 பேரை இதுவரை காணவில்லை. திருப்பதி, திருமலை, நெல்லூர், மதனபள்ளி, ராஜம்பேட்டை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் 196 மண்டலங்கள் 1,402 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன.

    69,196 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடப்பாவில் உள்ள அன்னமய்யா அணை சேதமடைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த 1434 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் 42,999 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 1,887 கிலோமீட்டர் சாலைகளும், 59.6 கிலோமீட்டர் தூரம் குடிநீர் பைப் லைன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    71 அரசுப் பள்ளிகளும் 2,054 கிலோமீட்டர் கிராம சாலைகளும் சேதமடைந்துள்ளது. மேலும் வரும் 27, 28-ந் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    உடனடியாக மத்திய அரசு ஆய்வுக் குழுவை அனுப்பி வைத்து சேதங்களை பார்வையிட வேண்டும் என கூறியிருந்தார்.
    மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது.
    திருப்பதி: 

    அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. மழை சற்று திசைமாறி ஆந்திரா நோக்கி சென்றது.

    ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கின. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழைக்கு ஆந்திராவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 17-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல் மந்திரியிடம் கேட்டறிந்தபிரதமர் மோடி, ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

    இந்நிலையில், ஆந்திர சட்டப் பேரவையில் அம்மாநில வேளாண்துறை மந்திரி கொரசாலா கண்ணபாபு ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.

    ஆந்திராவில் 4 மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 34 பேர் இறந்துள்ளனர். இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 5 லட்சத்து 33 ஆயிரம் விவசாயிகள் பயிர் சேதத்தைச் சந்தித்துள்ளனர். பலியான கால்நடைகள், சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவில் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
    திருப்பதி: 

    அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், மழை சற்று திசைமாறி ஆந்திரா நோக்கி சென்றதால் சென்னை தப்பியது. ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கின.

    கல்யாணி அணை நிரம்பியதால், 2 மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், டூவீலர்கள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த மழைக்கு ஆந்திராவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல் மந்திரியிடம் கேட்டறிந்தார். அப்போது, ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என உறுதியளித்தார்.

    இந்நிலையில், ஆந்திராவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேரை காணவில்லை. இதுவரை 64 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    ×