search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thunder and lightning"

    • நெல்லையில் நேற்று ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
    • மணிமுத்தாறு அணை பகுதியில் பெய்த மழையால் சற்று நீர்வரத்து ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் உக்கிரம் காரணமாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு அனல் பறக்கிறது.

    திடீர் மழை

    இந்நிலையில் நேற்றும் பகல் முழுவதும் கடுமையான வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு சில இடங்களில் இடி-மின்னலு டன் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.

    குறிப்பாக மாநகரில் தச்சநல்லூர் பகுதியில் கனமழை பெய்தது. அங்கு பலத்த காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    மின்தடை

    தச்சநல்லூர் பகுதியில் மின்தடையால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. அங்கு சில இடங்களில் இன்று அதிகாலை வரை மின்வினியோகம் இல்லை. எனினும் மின் ஊழியர்கள் விடிய, விடிய பணி செய்து மின் வினியோகத்திற்கு வழிவகை செய்தனர். பேட்டையில் இடி-மின்ன லால் முதியவர் பலியானார்.

    மணிமுத்தாறு அணை பகுதியில் பெய்த மழையால் சற்று நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு அதிகபட்சமாக 32.20 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கன்னடி யன் கால்வாய் பகுதியில் 8 மில்லிமீட்டரும், நெல்லையில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. அங்கு 2.60 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் திடீர் மழை பெய்தது. காக்காச்சி முக்கு பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு 64 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் 48 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    • களக்காட்டில் சூறைக்காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விட்டது.
    • நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாலை நேரத்தில் பரவ லாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டார பகுதிகள், களக்காடு, நாங்குநேரி, அம்பை, நெல்லை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் பொதுமக்கள் நட மாட்டம் குறைந்து காணப்படும் நிலையில் மாலையில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு இடியுடன் கூடிய மழை பெய்கிறது.

    களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விட்டது. பாளை, நெல்லை, கன்னடியன், நாங்குநேரி பகுதிகளில் மாலைநேரத்தில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நேற்று இரவும் பாளை மற்றும் மாவட்டத்தின் சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கன்னடியன் கால்வாய் பகுதியில் 9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்ச மாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டரும், காக்காச்சி யில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்தது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்ைட, புளியரை, ஆய்க்குடி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்யும் இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக செங்கோட்டையில் 21.8 மில்லிமீட்டர், சங்கரன்கோவில், சிவகிரி, அடவி நயினார் அணைபகுதி களில் தலா 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆய்குடியில் 15 மில்லிமீட்டரும், தென்காசியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 7.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணை பகுதிகளுக்கு பெரிய அளவில் நீர் வரத்து இல்லாமல் போனாலும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    • மழை காரணமாக காங்கயம் நகர பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
    • காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.

     காங்கயம்:

    காங்கயத்தில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் வாட்டியது. வெப்பத்தின் தாக்கத்தால் காங்கயம் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பின்னர் மாலை சுமார் 6.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் 1 மணி நேரம் பெய்தது.

    காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்றன. மழை காரணமாக காங்கயம் நகர பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    இதேபோல் காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் முழுவதும் கடும் வெயிலால் அவதிப்பட்ட காங்கயம் பகுதி மக்களுக்கு நேற்று பெய்த மழை குளு குளு சீதோஷ்ண நிலையை உருவாக்கி, சற்றே இதமாக இருந்தது.

    • செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • நேற்றும் மாலை 6 மணி முதல் சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பொழிகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை 6 மணி முதல் சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்திற்கு இணையாக வெயில் அடித்து வந்த நிலையில், இந்த தொடர் மழையால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி செங்கோட்டையில் 23.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசியை அடுத்த ஆய்க்குடியில் 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேலும் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 17.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தற்போது குண்டாறு அணையில் 19.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    கடனா, ராமநதி அணைகளில் நீர்மட்டம் தலா 31 அடி உள்ளது. பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 10.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    • சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.
    • திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. இந்த நிலை யில் சங்கராபுரம் பகுதியில் திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    இதனால் சங்கராபுரம் பஸ் நிலையம், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதி களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. திடீர் மழையால் பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதே போல் பகண்டை கூட்டு ரோடு, அரியலூர், வானபுரம், பகுதியிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

    • மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
    • மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மின் வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    மின் கசிவு தடுப்பான் மூலம் மின் விபத்தை தடுக்கலாம். ஸ்டே கம்பிகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது. குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் எர்த் பைப் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது. குளியல் அறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்ஜ் அமைக்கக்கூடாது.

    மின் கம்பங்களில் அருகே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. அறுந்து போகும் மின் கம்பிகள் தெரிந்தால் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவியுங்கள்.

    மின் கம்பங்கள் மீது வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் மூலமும் அகற்றலாம். இடி,மின்னலின் போது வெட்டவெளியில் நிற்க கூடாது.

    மின்சாரம் தொடர்பாக மின்னகம் எண்: 9498794987, வாட்ஸ் ஆப் எண்: 94458 51912 என்ற எண்ணுக்கு புகாராகவும், புகைப்படமாகவும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் மாலை லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மாலையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது. பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகம் செல்லும் எதிரே உள்ள மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் மோகன் ராஜ், விஜய் ஆனந்த் மற்றும் பணியாளர்கள் உடனே சம்பவத்திற்கு வந்து மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு போக்குவரத்து சீரானது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 67 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதைபோல் கவுந்தப்பாடி, அம்மா பேட்டை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை பகுதியில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-67, கவுந்த–ப்பாடி-18.40, அம்மா–பேட்டை-11.60, வரட்டு–பள்ளம்-7, குண்டேரி–பள்ளம்-6.20, சென்னி–மலை-3.

    • ஈரோடு மாவட்டத்தில் இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
    • அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடந்த சில நாட்களாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டு வகித்தது. இரவு 7 மணி முதல் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை பெய்யத் தொடங்கியது.

    மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொடுமுடி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, கொடிவேரி, தாளவாடி, சென்னிமலை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-90, கொடுமுடி-57, கவுந்த ப்பாடி-22, மொடக்குறிச்சி, வரட்டுபள்ளம்-21, ஈரோடு, பவானி-15, கோபி-9.4, குண்டேரிபள்ளம்-7.6, பெருந்துறை-7, கொடி வேரி-6.2, தாளவாடி-6, சென்னிமலை-4, பவானிசாகர்-3.2, சத்தியமங்கலம்-3.

    ×