இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையால் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்

மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையாலும் 25 பேர் உயிரிழந்தனர்.உத்தரப் பிரதேசத்தில் கனமழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 22 பேர் உயிரிழந்தது குறிபிடத்தக்கது.
இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையால் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்
Published on

பீகாரின் பல மாவட்டங்களில் நேற்று (வியாழக்கிழமை) இடி, மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையாலும் 25 பேர் உயிரிழந்தனர்.

முதலமைச்சர் அலுவலகம் (CMO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளந்தாவில் 18 பேரும், சிவானில் 2 பேரும், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

முன்னதான புதன்கிழமை, பீகாரின் நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்தனர். அதேசமயம் உத்தரப் பிரதேசத்தில் கனமழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 22 பேர் உயிரிழந்தது குறிபிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com