search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் இடி-மின்னலுடன் நீடிக்கும் கோடை மழை
    X

    நெல்லை மாவட்டத்தில் இடி-மின்னலுடன் நீடிக்கும் கோடை மழை

    • களக்காட்டில் சூறைக்காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விட்டது.
    • நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாலை நேரத்தில் பரவ லாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டார பகுதிகள், களக்காடு, நாங்குநேரி, அம்பை, நெல்லை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் பொதுமக்கள் நட மாட்டம் குறைந்து காணப்படும் நிலையில் மாலையில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு இடியுடன் கூடிய மழை பெய்கிறது.

    களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விட்டது. பாளை, நெல்லை, கன்னடியன், நாங்குநேரி பகுதிகளில் மாலைநேரத்தில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நேற்று இரவும் பாளை மற்றும் மாவட்டத்தின் சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கன்னடியன் கால்வாய் பகுதியில் 9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்ச மாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டரும், காக்காச்சி யில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்தது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்ைட, புளியரை, ஆய்க்குடி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்யும் இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக செங்கோட்டையில் 21.8 மில்லிமீட்டர், சங்கரன்கோவில், சிவகிரி, அடவி நயினார் அணைபகுதி களில் தலா 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆய்குடியில் 15 மில்லிமீட்டரும், தென்காசியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 7.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணை பகுதிகளுக்கு பெரிய அளவில் நீர் வரத்து இல்லாமல் போனாலும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×