search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசு பொருட்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
    • இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

    2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது

    இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடியின் 1,200 பரிசு பொருட்கள் ஏலம் தொடங்கியது.
    • பலரும் ஏலம் கேட்கிற பொருட்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி

    பிரதமர் மோடி விழாக்களில் பங்கேற்றபோது, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பின்போது நினைவுப்பரிசுகளாக வழங்கப்பட்ட 1,200 பொருட்களை ஆன்லைன் வழியாக (மின்னணு ஏலம்) ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த மின்னணு ஏலம் நேற்று முன்தினம், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளில் தொடங்கி உள்ளது. இது அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நீடிக்கிறது. இந்த ஏலம் pmmementos.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் நடத்தப்படுகிறது. அதில் அதிகம் பேர் பங்கேற்ற ஏலம் என்ற தலைப்பில் பொருட்களை பட்டியலிடும் பிரிவு உள்ளது.

    இப்படி அதிகளவில் பெரும்பாலோர் ஏலத்தில் வாங்க விரும்பும் பொருட்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய ஒரு பார்வை இது:-

    * பிரதமர் மோடி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) முன்னாள் வீரர் என்பதற்கான அடையாள அட்டை. நேற்று காலை 11 மணி நிலவரப்படி இந்த அட்டையை 20 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.

    * அயோத்தியில் கட்டப்படுகிற பிரமாண்ட ராமர் கோவில் மாதிரி. இது கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டுள்ளது. 6 கிலோ எடை கொண்ட இந்த மாதிரியின் அடிப்படை விலை ரூ.10 ஆயிரத்து 800 ஆகும்.

    * ஏலத்துக்கு வந்துள்ள ஆன்மிக நினைவுப்பொருட்களில் உலோக சங்கு, பிள்ளையார் சிலைகள், திருப்பதி பாலாஜி மரச்சிலை மாதிரி , திரிசூலம் உள்ளிட்டவை அடங்கும். திருப்பதி பாலாஜி மரச் சிலை மாதிரியை பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கியவர், ஆந்திர கவர்னர் பிஸ்வா பூஷண் ஹரிசந்தன் ஆவார்.

    * உலோக சங்கானது, நேர்த்தியானது, அது ஒரு சிவப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கில் நாகத்தின் மீது விஷ்ணு ஓய்வு எடுப்பதையும், லட்சுமி தேவி அவரது பாதங்களை தொடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு தனது சூலாயுதம், தாமரை, சங்கு போன்றவற்றை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளார். 10 செ.மீ. நீளமும், 1150 கிராம் எடையும் உள்ள இந்த சங்கை நேற்று காலை 11 மணி வரை 30 பேர் ஏலம் கேட்டிருக்கிறார்கள்.

    * சென்னையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (சிலை) ஏலத்துக்கு உள்ளது. சிலை தம்பி என்று அழைக்கப்படுவதாகும். இது தமிழர்களின் பாரம்பரிய உடையில் கைகளை குவித்து வணக்கம் சொல்வதாக அமைந்துள்ளது. 31 செ.மீ. உயரமும், 1,650 கிராம் எடையும் உள்ள தம்பியை 30 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.

    * அலங்கரிக்கப்பட்ட வாள், அசோக சின்னம், நடராஜர் சிலை போன்றவையும் பலரால் ஏலம் கேட்கப்படுகிற நினைவுப்பரிசுகளாக அமைந்துள்ளன.

    * தும்பிக்கையை மேல் நோக்கி உயர்த்திய தங்க முலாம் பூசப்பட்ட யானை, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள மர செஸ் பலகை மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட 32 சதுரங்க துண்டுகள் ஆகியவையும் அடங்கும்.

    * பிரதமர் மோடி பேசுவது போன்ற சிறிய சிலை

    * சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் கையெழுத்திட்ட வெள்ளை டி சர்ட்டும் ஏலத்துக்கு இருக்கிறது. இதன் அடிப்படை விலை ரூ.3 லட்சம் ஆகும்.

    இந்த ஏல விற்பனையில் கிடைக்கிற தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

    • ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளது.
    • அக்டோபர் 2-ந் தேதி ஏலம் முடிவடைகிறது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.

    ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளது. இந்தநிலையில், 4-வது தடவையாக, வருகிற 17-ந் தேதி ஏலம் தொடங்குகிறது.

    1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    பிரத்யேக இணையதளம் ஒன்றின் வழியாக ஏலம் நடக்கிறது. அக்டோபர் 2-ந் தேதி ஏலம் முடிவடைகிறது.

    பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை இருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இப்பொருட்களில் சாமானியர் ஒருவர் அளித்த பரிசுப்பொருளும் இருக்கிறது. நாட்டின் வளமான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.

    மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் பரிசளித்த ராணி கமலாபாதி சிலை, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை மற்றும் சூரியன் ஓவியம், இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் பரிசளித்த திரிசூலம், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் அளித்த கோல்ஹாபூர் மகாலட்சுமி கடவுள் சிலை, ஆந்திர முதல்-மந்திரி அளித்த ஏழுமலையான் படம் ஆகியவையும் பரிசு பொருட்களில் அடங்கும்.

    டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் உள்ளன.

    அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி வடிவம், காசி விஸ்வநாதர் கோவில் மாதிரி வடிவம் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.

    • சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளை ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    • மணியன் தீவு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் 120 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்புவேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள்ச ர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளைஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதையடுத்து மணியன் தீவு பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன் , முன்னாள் நகர தலைவர் வைரவன் , காங்கிரஸ் நகர பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ.பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,நகர துணைத்தலைவர் ரபீக், வர்த்தக அணி பொதுச் செயலாளர் அப்துல் உசேன், ஜ.என்டி.யூசி உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன், மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா ,நகர மகளிர் அணி தலைவர் ரத்னமாலா, நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை, தகவல் நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் அனைத்து காங்கிரஸ் கட்சிநிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×