search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்கள் சேதம்"

    • காட்டு பன்றிகள், குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
    • விவசாயி களின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மதுரை

    மதுரை மேற்கு வட்டாட்சி யர் அலுவ லகத்தில் விவசா யிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விவசா யிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    சேதமடைந்துள்ள துவரிமான் கண்மாய் ஷட்டரை சரி செய்ய வேண்டும். கீழமாத்தூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், கீழக் குயில்குடி தட்டானூர் பொட்டக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், துவரிமான் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது.

    அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ.க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செண்பக தோப்பு பகுதியில் பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியது.
    • செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பக தோப்பு பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் காட்டாறுகள் வறண்டு காணப்படுகிறது.

    கோடை காலம் தொடங்கும் முன்பே கடுமையான வெயில் அடிப்பதால் ஊற்றுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி மலை அடிவாரத்திற்கு வருகின்றன. அடிவா ரப்பகுதியில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களாக மலை அடிவாரத்திற்கு தண்ணீர் தேடி வரும் ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் உள்ள வாழை, மா, பப்பாளி உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் அடிவாரத்தில் அமைக்கப்பட்டது போல் மலைப்பகுதியிலும் தண்ணீரை தேக்கி வைத்தால் வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • மிளகாய்கள் மழையில் நனைந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    • மழையில் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    மேற்பரப்பு சுழற்சியின் தாக்கத்தால் ஆந்திராவில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    உத்தராந்திரா முதல் ராயலசீமா வரை இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மழைநீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், மிளகாய், உளுந்து, தினை பயிர்கள், வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று காரணமாக சாலையோரம் இருந்த பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்து மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏலூர் மாவட்டம் ஜங்காரெட்டிகுடம் பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 38) என்ற பெண் தனது வீட்டின் அருகே சிறிய கொட்டகை அமைத்து கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த மரம் ஒன்று கடை மீது விழுந்தது. கடையில் இருந்த சந்தியா மீது மரம் விழுந்ததால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அனந்தபுரத்தில் மின்னல் தாக்கி ஸ்ரீவித்யா (38) என்ற பெண் உயிரிழந்தார். அல்லூர் மண்டலம் மணல்மேட்டில் இடி தாக்கி 4 கால்நடைகள் இறந்தன.

    ஸ்ரீகாகுளம் மற்றும் நெல்லூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள தானியங்களை அரசு கொள்முதல் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் இருப்பு வைத்தனர்.

    தற்போது பெய்து வரும் மழையால் தானியங்கள் நனைந்து நிறம் மாறிவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பல்நாடு பிரகாசம், என்டிஆர், கர்னூல், அனந்தபூர், அல்லூரி சீதாராமராஜ், ஒய்எஸ்ஆர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல 100 ஏக்கரில் மிளகாய் அறுவடை செய்து இருப்பு வைத்திருந்தனர்.

    மிளகாய்கள் மழையில் நனைந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    மழையில் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தராந்திரா, மத்திய ஆந்திரா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மீதமுள்ள மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.
    • நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.

    குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.

    இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை டெல்டா மாவட்டங்களை பார்வையிட அனுப்பி வைத்தார். அவர்களுடன் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உணவுத்துறை விவசாயத்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

    இவர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதங்களை பார்வையிட்டனர்.

    ஒவ்வொரு மாவட்டங்களாக சென்ற இவர்கள் விவசாயிகளிடம் நெல் ஈரப்பதம் விவரங்களை கேட்டு அறிந்தனர். இதுபற்றி முதலமைச்சருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சி அடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், சேதம் அடைந்த நிற மாற்றம் மற்றும் முளைத்தை நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளர்த்தவும் தேவையான மதிப்பை சம்பா பயிருக்கும் குறைக்கவும் விதிமுறைகளில் தளர்வை அறிவிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் சேத மதிப்பை பார்வையிட்ட அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிாரிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பயிர்சேத விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

    அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

    * கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

    * நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

    * நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

    * கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

    * பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அபிராமம் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், பாப்பனம், நகரத்தார் குறிச்சி, பள்ளபச்சேரி, உடையநாதபுரம், விரதக்குளம், காடனேரி, பொட்டகுளம் உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இந்த பயிர்களை காட்டுப் பன்றி, மான்கள் சேதப்படுத்தி நாசம் செய்து வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

    பி்ன்னர் வன விலங்கு களிடம் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

    இதுகுறித்து விவசாயி விரதக்குளம் கர்ணன் கூறுகையில், மான், காட்டுப்பன்றி, முயல், நரி போன்ற வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிராமங்களில் நிலக்கடலை, பயிறு வகைகள், கேப்பை போன்ற பயிர்களை சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். வனத்துறையினர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • முயல்கள், கீரிகள், உடும்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
    • கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது.

    காங்கயம்:

    பொதுவாக வனப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்களில் முயல், கீரி, உடும்பு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வாழும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேய்ச்சல் நிலங்கள் அதிகளவில் இருந்தன. அதில் செம்மறியாடுகள், மாடுகள் மேய்வதற்காக மானாவாரி பயிர்களான கொள்ளு, நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைத்து சொந்தப் பயன்பாட்டுக்கு அறுவடை செய்தது போக மீதமுள்ளவற்றை ஆடு, மாடுகளை மேயவிடுவது வழக்கம்.

    அது போன்ற மேய்ச்சல் நிலங்களில் பாம்புகள், உடும்பு, கீரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக காணப்படும். இதில் பாம்புகளை கணிசமான அளவில் கீரிகள் வேட்டையாடிவிடும். கீரி, முயல், உடும்பு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வேட்டையாடி உணவுக்காக பயன்படுத்துவர். இதனால் முயல், கீரி உள்ளிட்ட விலங்குகளின் பெருக்கம் என்பது கட்டுக்குள் இருந்தது.

    காலப்போக்கில் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், தொழில் கூடங்களாகவும் மாறத் தொடங்கியதும் வன விலங்குகளின் வாழ்விடங்களும் குறையத் தொடங்கின. அதே நேரத்தில் வனவிலங்குகள் வேட்டையாடுதல் தடையை அதிகாரிகள் உறுதியாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியதால் வேட்டையாடுதல் என்பது குறைந்து போனது. இதனால் முயல்கள், கீரிகள், உடும்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக காங்கயம் பகுதி கிராமங்களில் முயல்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. காடுகள் அழிக்கப்பட்ட நிலையிலும் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் முயல்கள் குட்டிபோட்டு தங்கள் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக முயல்கள் பசுந்தீவனத்தைதான் அதிகமாக விரும்பி உண்ணும் என்பதால் கொழுக்கட்டை புற்கள் வளர்ந்து நிற்கும் காடுகள், ஆடு, மாடுகளுக்காக பயிரிட்டுள்ள நிலங்கள், வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்கள் செய்யப்பட்ட நிலங்களில் இரவு நேரத்தில் மேய்ந்துவிட்டு பகல் நேரங்களில் சிறிய புதர்களுக்குள் சென்று ஓய்வெடுத்து வருகிறது.

    இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போது:-

    தற்காலத்தில் முயல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. வேட்டையாடுதல் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவில் யாரும் வேட்டையாடுவது இல்லை. அதிகரித்து வரும் முயல் கூட்டம் இரவு நேரங்களில் விவசாய பயிர்களையும் கடித்து சேதப்படுத்துகிறது. தொடர்ந்து முயல்களின் பெருக்கம் அதிகரித்தால் அது விவசாயிகளுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அறிதான ஒன்றாக இருந்து வந்தது. வனங்களில் காணப்படும் மயில்கள் சில கோவில்களில் வளர்ப்பு பிராணிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றி வரும். ஆனால் அதற்கு பின்னர் கிராமப் புறங்களில் புதராக இருக்கும் இடங்களில் மயில்களைக் காண முடிந்தது. தொடர்ந்து மயில்களின் பெருக்கம் அதிகரித்து தற்போது காக்கை,குருவிகளுக்கு நிகராக கிராமங்கள் தோறும் பலநூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றித் திரிகின்றன. பல்லி, ஓணான், தவளை, சிறுபாம்புகள் உள்ளிட்டவற்றை உணவாக உண்டு வாழும் மயில்கள் தானியங்களையும் கொத்தித் தின்று வருகின்றன. தானியங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, தட்டைப் பயறு, பாசிப்பயறு உள்ளிட்டவற்றையும் உணவாக உட்கொள்ளும்.

    மயில்கள் பரவத் தொடங்கிய காலத்தில் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றித் திரிந்ததால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் மயில் கூட்டம் அபரிமிதமாக பெருகிவிட்டது. குறிப்பாக கிராமங்களில் காக்கை, குருவிகளை காட்டிலும் மயில்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. புதர்களுக்குள்ளும், ஆள் நடமாட்டமில்லாத இடங்களிலும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. முன்பு நரிகள் அதிகமாக இருந்ததால் அவைகள் மயில்கள் இடும் முட்டைகளை தின்று விடும்.ஆனால் தற்ேபாது நரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் மயில்களின் பெருக்கம் அதிகமாகி மதிய நேரங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்களில் சென்று ஓய்வெடுத்துவிட்டு காலை,மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் படையெடுத்து சென்று பயிர்களை கொத்தி சேதப்படுத்துவதுடன் பயிர்களை மிதித்தும் சேதம் செய்வதாக விவசாயிகள் கவலை ெதரிவித்தனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "கடந்த 10வருடங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் 3 முதல் 4 மயில்களே செல்லும். ஆனால் தற்போது அதிக பெருக்கத்தால் ஒரு மயில் கூட்டத்தில் 10 முதல் 15 மயில்கள் செல்கின்றன. மக்காச்சோளம், சோளம், தட்டை உள்ளிட்ட பயிர்களை கொத்தி தின்பதோடு கால்களால் மிதித்தும் சேதம் செய்து விடுகிறது. தவிர சோளம், தட்டை உள்ளிட்ட விதைகளை விதைத்து அது முளைவிடும் தருணத்தில் வேரோடு பிடிங்கித் தின்றுவிடுகின்றன. முன்பெல்லாம் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் மயில்கள் தற்போது விரட்டினால் கூட ஓடுவதில்லை. பட்டாசுகளை வெடித்தாலும் சாதாரணமாக தலையை தூக்கி பார்த்துவிட்டு பயிர்களை கொத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. ஏற்கனவே பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் நாங்கள் தற்போது இந்த மயில் கூட்டம் பயிர்களை சேதம் செய்வதால் செய்வதறியாது தவிக்கிறோம். எனவே மயில்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.

    • பொருளாதார இழப்போடு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.
    • பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது.தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் துவங்கும் போது அணைக்கு நீர் வரத்து அதிகரித்து ஜுன், ஜூலை மாதத்தில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் திறக்கப்படும்‌.

    முன்னதாக இந்த அணை மூலம் திறக்கப்படும் நீர் மூலம் உடுமலை ,மடத்துகுளம் ,தாராபுரம் தாலுகா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது‌. மேலும் மக்காச்சோளம், கரும்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட கல்லாபுரம்-ராமகுளம் கால்வாய் மூலம் சுமார் 3200 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பாசன வசதி செய்து வருகின்றனர்.இப்பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக நெற்கதிர்கள் உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    மேலும் இப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரிலும் சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும் மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளதால் பெரும் பொருளாதார இழப்போடு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.

    ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ள நிலையில் தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கூறி முறையிடுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:- நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்து இருந்தோம். இந்த நிலையில் தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி இருக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து, பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    • பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.

      உடுமலை:

    குடிமங்கலம் வட்டாரத்தில் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.சேதம் குறித்த தகவல் கிடைத்ததும் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத்,உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் கொண்டம்பட்டி பகுதியில் காலிபிளவர் சாகுபடியில் சேதம் ஏற்பட்டுள்ளது.சொட்டு நீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஒரு மாதம் வயது கொண்ட காலிபிளவர் மழைநீரில் முழுவதுமாய் மூழ்கி விட்டது.அத்துடன் சுமார் 65 முதல் 70 நாள் வயது கொண்ட காலிபிளவர் பூக்கள் முழுவதும் அழுகி வீணாகியுள்ளது.காலிபிளவரைப் பொறுத்தவரை பூக்கும் பருவத்தில் மழை பெய்வது மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.தற்போது பெய்துள்ள கனமழையால் இந்த பகுதியில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த காலிபிளவர் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இதுதவிர சில பகுதிகளில் வெண்டை செடிகளும் விளைநிலத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    பீட்ரூட்,சின்ன வெங்காயம்,தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்களும் பலத்த மழையால் சேதமடைய வாய்ப்புள்ளது.இதுதவிர பலத்த காற்று வீசினால் வாழை மரங்களும் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.சேதத்தைத் தவிர்க்க விவசாயிகள் வடிகால் வசதி,முட்டு கொடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதையும் தாண்டி மழை மற்றும் காற்றினால் தோட்டக்கலைப் பயிர்களில் சேதம் கண்டறியப்பட்டால் விவசாயிகள் உடனடியாக தோட்டக்கலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம்-9944937010,உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணக்குமார்-9789197648,சங்கவி-8111055320,ராஜசேகரன்-8675556865 ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

    • தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த தொடர் மழையால், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்தது.
    • மழை நீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    எடப்பாடி:

    கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சித்தூர், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, வெள்ளரிவெள்ளி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த தொடர் மழையால், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

    குறிப்பாக காவிரி பாசனப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையால் சேதம் அடைந்து வருகிறது. இப்பகுதியில் மழைப்பொழிவு தொடர்ந்திடும் நிலையில், மேலும் பாதிப்பு அதிக ரிக்கக்கூடும் என இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நீர் அப்படியே திறக்கப்படுவதால், சின்னாற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது.
    • பல ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியது.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 5-ம் தேதி சின்னாறு அணை தனது முழுகொள்ளவை எட்டியதால் உபரி நீர் கடந்த ஒரு மாதமாக சின்னாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. சின்னாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 50 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து இறுதியில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்த 50 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு இடத்தில் கூட தடுப்பணைகள் இல்லா ததால், தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் இரு தினங்களாக சின்னாறு அணைக்கு 28 ஆயிரம் கன அடிநீர் வந்துக்கொண்டிருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்படுவதால், சின்னாற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சின்னாற்றை யொட்டி உள்ள பென்னா கரம்,கோடுப்பட்டி உள்ளிட்ட பகுதிக ளில் கரும்பு, நெல்,சோளம்,தீவனப்புல், மஞ்சள் , வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்திருந்த விளை நிலங்கள் மூழ்கிவாறு மழைவெள்ளம் அடித்து செல்கின்றது.

    அதே போல் கிணறுக்கள் மின் மோட்டார்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்த சென்றால் அப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரமின்றி உள்ளனர்.மேலும் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அதிகாரிகள் வந்து பார்வையற்றும் கண்டுகொள்ள செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் மேலும் சின்னாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பல ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியது.

    நீரில் அடித்து செல்லப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் யானைக் கூட்டம் சுற்றி திரிகிறது.
    • 6 யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சோளம், வாழை பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வளையக்குட்டை மகாலட்சுமி கோவில் செல்லும் வழியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் யானைக் கூட்டம் சுற்றி திரிகிறது.

    இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. யானையை விரட்ட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இன்று அதிகாலை 2 மணிக்கு வனத்தை விட்டு வெளியேறிய யானை கூட்டம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது. பின்னர் அங்குள்ள மணி என்ற சந்தோஷ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த 6 யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சோளம், வாழை பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். யானை நிற்பதை பார்த்த அவர்கள் பயத்தில் வீட்டை பூட்டி உள்ளேயே இருந்து கொண்டனர்.சிறிது நேரத்தில் ஒரு யானை மட்டும் விளை நிலத்தை விட்டு வெளியேறி சந்தோஷின் வீட்டின் அருகே வந்தது.

    பின்னர் வீட்டின் மேற்கூரையை பிரித்து தும்பிக்கையை உள்ளே விட்டு அரிசி ஏதாவது உள்ளதா? என தேடி பார்த்தது.

    ஆனால் ஒன்றும் இல்லாததால் நீண்ட நேரம் யானை வீட்டின் பின் பகுதியிலேயே நின்றது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், யானை கூட்டம் ஒரு வாரமாக வளையங்குட்டை, அட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு வருகிறது. மேலும் விளை நிலங்களையும் சேதப்படுத்துகிறது. எனவே இங்கு சுற்றி திரியும் யானை கூட்டத்தை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×