search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செண்பக தோப்பு பகுதியில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை
    X

    காட்டு யானை சேதப்படுத்திய வாழை மரங்கள்.

    செண்பக தோப்பு பகுதியில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை

    • செண்பக தோப்பு பகுதியில் பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியது.
    • செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பக தோப்பு பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட செண்பக தோப்பு வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாததால் காட்டாறுகள் வறண்டு காணப்படுகிறது.

    கோடை காலம் தொடங்கும் முன்பே கடுமையான வெயில் அடிப்பதால் ஊற்றுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி மலை அடிவாரத்திற்கு வருகின்றன. அடிவா ரப்பகுதியில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களாக மலை அடிவாரத்திற்கு தண்ணீர் தேடி வரும் ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் உள்ள வாழை, மா, பப்பாளி உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் அடிவாரத்தில் அமைக்கப்பட்டது போல் மலைப்பகுதியிலும் தண்ணீரை தேக்கி வைத்தால் வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×