search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்தக்கால் நடும் விழா"

    • தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா, சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 18 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஏப்ரல் 18-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.

    • ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்,
    • பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீ புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்,

    இந்த ஆண்டு வரும் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை ஸ்ரீபுதூர் பொன் மாரியம்மன் திருவிழா நடைப்பெறுவதையொட்டி திரெளபதியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஊர்கவுண்டர், மந்திரிகவு ண்டர், தர்மகர்த்தா, ஊர்முக்கிய பிரமுகர்கள், ஸ்ரீ புதூர் பொன் மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×