search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவேடு"

    • 1 முதல் 7 வரையிலான கணக்கு புத்தகங்கள், பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
    • ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் பார்வையிட்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், திருவையாத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை பார்வையிடுவதற்காக மத்திய ஊரக வளர்ச்சி அதிகாரிகள் பாலமுரளி, ஜஸ்டீன் பிரதீஷ் ஆகியோர் தலைமையிலான மத்திய குழுவினர் திருவை யாத்துக்குடி ஊராட்சிக்கு வருகை தந்தனர்.

    அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணி லாதர்மராஜ், தலை மையிலான கிராமமக்கள் மத்திய குழுவினரை வரவேற்றனர். முன்னதாக ஊராட்சி மன்றத்தில் பராமரித்து வரும் 1முதல் 7 வரையிலான கணக்கு புத்தகங்கள், பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து திருவையாத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற சாலைப்பணி, கட்டுமானப்பணி, தூர்வாரும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின கீழ் நடைபெற்ற வாய்க்கால் தூர்வாரும் பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப்பணிகள், உள்பட ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

    இந்த ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் அமானுல்லா, பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராமநிர்வாக அதிகாரி ஜோதிபிண்டியன் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன.
    • இரவு ரோந்து, வாகன தணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம்.

    சீர்காழி:

    சீர்காழி காவல் உட்கோட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, புதுப்பட்டி னம், ஆணைக்காரன்சத்திரம், பூம்புகார் உள்ளிட்ட காவல்நி லையங்கள் உள்ளன.இதில் சீர்காழி காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஏரியா பரப்பளவு அதிகமாக உள்ளது. இதில் பல கிராமங்கள் உள்ளடங்கியுள்ளது.

    சீர்காழி காவல்நி லையத்தில் சுமார் அரசு நிர்ணயப்படி 39 காவலர்கள் இருக்கவேண்டும். இவற்றில் 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன. ஆனால் இந்த 37 காவலர்களில் 16 காவலர்கள் வெளி காவல் பணியில் வெவ்வேறு காவல்நிலையங்களில் உள்ளனர்.

    இதனால் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. இரவு ரோந்து, வாகனதணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம் ஏற்படுகிறது.இது குற்றசெயல்கள் நடைபெற ஏதுவாக அமைந்து விடுகிறது. சங்கிலிபறிப்பு, வாகனதிருட்டு, சாராயம், கஞ்சா கடத்தல்போன்ற சம்பவங்கள் அதிக ரித்துவருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. ஆகையால் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டல், திருமுல்லைவாசல் பகுதிகளில் புறகாவல் நிலையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வலுபெற்று வருகிறது.

    இதன் மூலம் புறகாவல்நி லையத்தில் 1 உதவி காவல் ஆய்வா ளர், 4 காவலர்கள் பணிய மர்த்தப்படும் போது அந்த பகுதி மற்றும் சுற்றப்புற கிராமங்களில் ரோந்து சென்று குற்றசெல்களை தடுத்திட முடியும் ஆகை யால் காவல்துறைதலைவர் உடனடியாக முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 100 நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.
    • வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீசா ரால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக, அந்தந்த போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.

    இந்த வருடாந்திர ஆய்வில் சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு காவல் ஆளினர்களின் கவாத்து, உடை பொருட்களை தணிக்கை செய்தார். பின்னர் 24 இருசக்கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த வாக னங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்ப டுகிறதா? என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, தஞ்சை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×