search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொண்டல், திருமுல்லைவாசல் பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்
    X

    கொண்டல், திருமுல்லைவாசல் பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

    • 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன.
    • இரவு ரோந்து, வாகன தணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம்.

    சீர்காழி:

    சீர்காழி காவல் உட்கோட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, புதுப்பட்டி னம், ஆணைக்காரன்சத்திரம், பூம்புகார் உள்ளிட்ட காவல்நி லையங்கள் உள்ளன.இதில் சீர்காழி காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஏரியா பரப்பளவு அதிகமாக உள்ளது. இதில் பல கிராமங்கள் உள்ளடங்கியுள்ளது.

    சீர்காழி காவல்நி லையத்தில் சுமார் அரசு நிர்ணயப்படி 39 காவலர்கள் இருக்கவேண்டும். இவற்றில் 37 காவலர்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன. ஆனால் இந்த 37 காவலர்களில் 16 காவலர்கள் வெளி காவல் பணியில் வெவ்வேறு காவல்நிலையங்களில் உள்ளனர்.

    இதனால் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. இரவு ரோந்து, வாகனதணிக்கை, குற்ற செயல்களை கண்காணித்து தடுப்பது போன்ற பணிகளில் சுனக்கம் ஏற்படுகிறது.இது குற்றசெயல்கள் நடைபெற ஏதுவாக அமைந்து விடுகிறது. சங்கிலிபறிப்பு, வாகனதிருட்டு, சாராயம், கஞ்சா கடத்தல்போன்ற சம்பவங்கள் அதிக ரித்துவருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. ஆகையால் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டல், திருமுல்லைவாசல் பகுதிகளில் புறகாவல் நிலையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வலுபெற்று வருகிறது.

    இதன் மூலம் புறகாவல்நி லையத்தில் 1 உதவி காவல் ஆய்வா ளர், 4 காவலர்கள் பணிய மர்த்தப்படும் போது அந்த பகுதி மற்றும் சுற்றப்புற கிராமங்களில் ரோந்து சென்று குற்றசெல்களை தடுத்திட முடியும் ஆகை யால் காவல்துறைதலைவர் உடனடியாக முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×