search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டு புத்தகம்"

    • காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் மற்றும் தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    காமராஜரின் 121 வது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில்அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் 150 மாணவ மாணவிகளுக்கும், தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது .

    இதில் மத்திய மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் அப்பாஸ்,மத்திய மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்,மத்திய மாவட்ட கௌரவ ஆலோசகர் லோகு ,மத்திய மாவட்ட ஆலோசகர் வசந்த் ,மாவட்ட நிர்வாகி மகேந்திரன் , மருது, தெற்கு நகர நிர்வாகிகள் ஹரிஸ் ராம்,முருகன், சரவணக்குமார், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
    • பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்பட்டதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சாமளாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி, உதவி ஆசிரியர்கள் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, கனகசபாபதி , மோகனாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாணவர்களிடம் தன்சுத்தம் பேணுதல், சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக செல்வது என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    • வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் பெரிய பட்டியில் நடைபெற்றது.
    • கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆணைக்கிணங்க குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் பெரியபட்டியில் நடைபெற்றது.

    இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரியபட்டியில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பெரியபட்டி அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்வக்குமார், ரவி பிரபு, சதாசிவம், மகேந்திரன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தியாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 450 பேர் பயனடைந்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் குமரன் அக்ரோ சர்வீஸ் மையம் உள்ளது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் விவசாய உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 450 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை வழங்கினர்.

    இதில் பாபு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்.

    ×