search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notebooks"

    • காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் மற்றும் தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    காமராஜரின் 121 வது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில்அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் 150 மாணவ மாணவிகளுக்கும், தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது .

    இதில் மத்திய மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் அப்பாஸ்,மத்திய மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்,மத்திய மாவட்ட கௌரவ ஆலோசகர் லோகு ,மத்திய மாவட்ட ஆலோசகர் வசந்த் ,மாவட்ட நிர்வாகி மகேந்திரன் , மருது, தெற்கு நகர நிர்வாகிகள் ஹரிஸ் ராம்,முருகன், சரவணக்குமார், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • காமராஜரின் உருவம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சப்பர பவனி நடைபெற்றது.

    சிவகிரி:

    காமராஜர் பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பாக நாடார் கடை பஜார் அருகே காமராஜர் கீழத்தெருவில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு காலையில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தொடங்கி வைத்தார்.

    மாலையில் காமராஜர் உருவப்படத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனி நாடார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாடார் உறவின் முறை நாட்டாமை ராமமூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதனைத் தொடர்ந்து பழனி நாடார் எம்.எல்.ஏ. 100 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சிலேடு, பென்சிலும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினார். காமராஜர் கீழத்தெருவில் பழனி நாடார் எம்.எல்.ஏ. நடந்து செல்லும் போது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

    பிள்ளையார் கோவில் அருகில் வைத்து மாற்று கட்சியிலிருந்து காளீஸ்வரன், மதன் ஆகியோர் உள்பட 20 இளைஞர்கள் விலகி பழனிநாடார் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓபிசி தலைவர் திருஞானம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் குருசாமி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முக சுந்தரம், தொகுதி ஓபிசி தலைவர் காந்தி, நகர பொருளாளர் விநாயகம், வட்டார செயலாளர் மருதப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நாடார் உறவின் முறை செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காமராஜரின் திருவுருவம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சப்பர பவனி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சப்பர பவனியை தொடங்கி வைத்தார். சப்பர பவனி முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து அன்னதானத்தை பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×