search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "note-book"

    • மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
    • பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்பட்டதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவ,மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சாமளாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசி, உதவி ஆசிரியர்கள் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, கனகசபாபதி , மோகனாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாணவர்களிடம் தன்சுத்தம் பேணுதல், சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக செல்வது என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    • வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் பெரிய பட்டியில் நடைபெற்றது.
    • கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆணைக்கிணங்க குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் பெரியபட்டியில் நடைபெற்றது.

    இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரியபட்டியில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பெரியபட்டி அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்வக்குமார், ரவி பிரபு, சதாசிவம், மகேந்திரன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தியாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 450 பேர் பயனடைந்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் குமரன் அக்ரோ சர்வீஸ் மையம் உள்ளது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் விவசாய உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டு சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 450 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை வழங்கினர்.

    இதில் பாபு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்.

    • மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
    • தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார்.

    மதுரை

    ெபருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி மதுரை கரும்பாலை நாடார் உறவின்முறை மற்றும் நாடார் மகளிர் அணி சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார். பெரியசாமி நாடார், தேவதாஸ் நாடார், காசி–ராஜன் நாடார், ராஜம்மாள் முன்னிலை வகித்தனர்.

    ஜான்கென்னடி, பாக்கியலட்சுமி, கோகிலா வரவேற்றனர். குட்டி என்ற அந்தோணி ராஜ், செலின், பிரியா ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் மைக்கேல்ராஜ், துணைத்தலைவர்கள் பெரியசாமி நாடார், ஜான்கென்னடி, செயலா–ளர் மோகன், துணை செயலாளர்கள் குட்டி என்ற அந்தோணி ராஜ், ஜான்சன், பொருளாளர் வேளாங்கண்ணி, ஆலோசகர்கள்தேவதாஸ் நாடார், காசிராஜன் நாடார், பிரபாகரன் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×