search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண தொகை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிச்சாங் புயல் காரணமாக சென்னை முழுக்க பாதிப்பில் சிக்கியது.
    • மிச்சாங் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல மீள துவங்க இருக்கிறது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், மிச்சாங் புயல் வெள்ளத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது. மிச்சாங் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதோடு, இதர நிவாரண உதவி தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். 


    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

     

    மிச்சாங் நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். புயல் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். எருது, பசு உயிரிழப்புகளுக்கு ரூ. 37 ஆயிரத்து 500 வரை நிவாரணம் வழங்கப்படும்.

    ஆடுகள் உயிரிழப்புக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த படகுகள், வலைகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

    சேதமடைந்த பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும்.

    • சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது.

    18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

    சென்னையில் 77 இடங்களில் மின் தடை நீடிக்கிறது. மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.

    சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும்.

    நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஏரிகள் பாதிக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், நெடுஞ்சாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் நீங்கிய பிறகு சேத மதிப்பு மறு ஆய்வு செய்யப்படும்.

    திருப்புகழ் கமிட்டி அடிப்படையில் குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    முன்பு தண்ணீர் தேங்கும் பல இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கும் நிலை இல்லை.

    மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ரூ.5,060 கோடி கேட்டுள்ளோம். விரைவில் மத்திய குழு வரும் என தெிர்பார்க்கிறோம்.

    மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.
    • இடிந்து விழுந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா பகுதிகளிலும், சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியிலும் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் சிவகிரி தாலுகா பகுதியில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது.

    சிவகிரி அண்ணா தெற்கு தெருவை சேர்ந்த சேர்வாரன் மகன் மாரியப்பன், சிவகிரி அருகே தாருகாபுரம் மடத்து தெருவை சேர்ந்த கோபி மகன் குருசாமி, தேசியம்பட்டி என்ற நாரணாபுரம் கலைஞர் புது காலனி தெருவை சேர்ந்த பிள்ளையார் மகன் கருப்பசாமி, தென்மலை பஞ்சாயத்து ஏ.சுப்பிரமணியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் சாலமன், ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அம்மையப்பன் மனைவி ராமலட்சுமி, சிவகிரி பாலகணேசன் தெருவை சேர்ந்த இசக்கி ராஜ் மனைவி ஆறுமுகத்தாள் ஆகிய 6 வீடுகள் கனமழையால் இடிந்து விழுந்து சேதமாயின.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், தலை மையிடத்து துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் சிவகிரி சுந்தரி, வாசுதேவநல்லூர் ராசாத்தி, கூடலூர் கோபால கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் மற்றும் உதவியாளர் அழகராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனமழையால் இடிந்து விழுந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    மழையால் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு முழு நிவாரண உதவி தொகையாக ரூ.5 ஆயிரம், பகுதி நிவாரணத் தொகையாக ரூ.4ஆயிரம், இதற்கான தொகைக்கு காசோலையாக சம்பந்தப்பட்டவர்களிடம் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் காசோலைகளை வழங்கினார். அப்போது சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் உடன இருந்தனர்.

    • விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி வழங்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை, இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக வழங்கப்படும்.

    12-ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும், விடுதியில் தங்கி பயிலும் மகன் மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2500-ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    • புதியம்புத்தூர் அருகே உள்ள குறுக்கு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடந்தது.
    • பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு புதியம்புத்தூர் அருகே உள்ள குறுக்கு சாலையில் நடந்தது. ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் லெனின் பழ மாணிக்கம் ஆகியோர் பேசினர். இதில் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டு உளுந்து, பாசிப்பயறு ஆகிய பயிர்கள் மஞ்சள் நோய் தாக்கியதால் போதிய விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே மத்திய -மாநில அரசுகள் உடனடியாக இப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி சந்தனம் நன்றி கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தற்போது அவர்கள் தங்களின் படகுகளை கரையில் நிறுத்தி அதில் உள்ள பழுதுகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் அரசு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த நிவாரண தொகை புதுக்கோட்டை மாவட்ட விசை படகு மீனவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு படகுகளை கடன் வாங்கி தான் சரி செய்யும் நிலை உள்ளது. தடைக்காலம் தொடங்கி கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

    நாகை மாவட்டத்தில் விசைபடகை கரையில் ஏற்றி பழுதுகளை சரி செய்வதற்கு அரசுடமை வங்கி மூலம் ரூ.5 லட்சம் கடன் உதவி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும்.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ×