search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவனம்"

    • முகாமில் கும்பகோணம், தஞ்சாவூரை சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறியமலா் மேல்நி லைப் பள்ளியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் கும்பகோணம், தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரி வரையிலான மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் கலந்து கொ ள்ளலாம்.

    மேலும், மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலைய ளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்யலாம்.

    பணி வேண்டுவோா் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா மற்றும் சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடுமண்டல ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட 25 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 1.50 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி பேசும்போது கடந்த 10 ஆண்டுகளாக கவ்டெசி தொண்டு நிறுவன வழிகாட்டுதலோடு செயல்பட்டு வரும் மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    தவணை தொகையும் முறையாக செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அனிஷ்குமார், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவி பேராசியர் மற்றும் தலைவர் ஜெகதீசன், ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் சீனிவாசன், சாமிநாதன், எழில் இளங்கோ, லோகேஷ்குமார், கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கருணாமூர்த்தி கலந்து கொண்டனர்.

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்றார்.

    இவ்விழாவில் சிறப்பாக செயல்பட்ட 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும், 25-க்கும் மேற்பட்ட கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன அலுவலகப் பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினர்.

    • 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
    • 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தேசிய பண்டிகையான சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்றுவிடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். நேற்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 51 முரண்பாடுகளும் என மொத்தம் 48 நிறுவனங்களில் 75 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    • ஹிட்டாச்சி, ஜிடெக், எல்காம்போ எலெக்ட்ரானிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு அலுவலர்கள் நேர்முகத் தேர்வு நடத்தினர்.
    • கல்லூரியுடன் ஹிட்டாச்சி நிறுவனம் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பாரதி கலையரங்கில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் தனியார் நிறுவன வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு, தஞ்சாவூர் மாவட்ட லயன்ஸ் சங்கம் முத்துக்குமரன், கண்ணன், வாசு, ஹிட்டாச்சி நிறுவன வேலை வாய்ப்பு நியமன அலுவலர் சரவணன் தலைமையில் ஹிட்டாச்சி, ஜிடெக், எல்காம்போ எலெக்ட்ரானிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு அலுவலர்கள் நேர்முகத் தேர்வு நடத்தினர்.

    முகாமில் 57 பேர் கலந்து கொண்டனர். இதில் 15 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், ஆண்டு தோறும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கல்லூரியுடன் ஹிட்டாச்சி நிறுவனம் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். விழாவில் பேராசிரியர்கள் முனைவர் ராணி, பழனிவேல், ஞானசேகரன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கரித்தூள் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போக்குவரத்து நகரில் பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமான கரித்தூள் நிறுவனம் உள்ளது.

    இங்கு மரத்துகள்களை துண்டுகளாக மாற்றும் பணி நடைபெறுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றியது.

    இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் காப்பாற்றப்பட்டது. சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொண்டியில் பெண்களுக்கு வலை பின்னும் பயிற்சி வழங்கப்பட்டது.
    • வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் நபார்டு வங்கியும், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளான நண்டு வலை, முரல் வலை, செங்கனி வலை, நகரை வலை மற்றும் சலங்கை வலைகளை பின்னும் பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பினை கனரா வங்கியின் முதன்மை மேலாளர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    கனரா வங்கியின் விவசாய அலுவலர் சாமுவேல், அன்பாலயா தொண்டு நிறுவன நிறுவனர் சவேரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு இயக்குநர் வெள்ளிமலர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதையொட்டி 30 பெண்க ளுக்கு 15 நாட்களுக்கு வலை பின்னும் பயிற்சியினை பயிற்றுனர் சந்தியாகு பிச்சை தொடங்கி வைத்தார். அப்போது சொந்தமாக வலை பின்ன கற்றுக்கொள்வதால் சொந்த உபயோகத்திற்கும், மற்ற மீனவர்களுக்கும் வழங்க முடியும். இதனால் வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சி முடிவில் விற்பனை மேலாளர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

    ×