search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • முகாமில் கும்பகோணம், தஞ்சாவூரை சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தோ்வு செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறியமலா் மேல்நி லைப் பள்ளியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் கும்பகோணம், தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரி வரையிலான மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் கலந்து கொ ள்ளலாம்.

    மேலும், மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலைய ளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆள்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்யலாம்.

    பணி வேண்டுவோா் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×