மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா மற்றும் சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடுமண்டல ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட 25 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 1.50 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி பேசும்போது கடந்த 10 ஆண்டுகளாக கவ்டெசி தொண்டு நிறுவன வழிகாட்டுதலோடு செயல்பட்டு வரும் மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தவணை தொகையும் முறையாக செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அனிஷ்குமார், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவி பேராசியர் மற்றும் தலைவர் ஜெகதீசன், ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் சீனிவாசன், சாமிநாதன், எழில் இளங்கோ, லோகேஷ்குமார், கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கருணாமூர்த்தி கலந்து கொண்டனர்.

முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்றார்.

இவ்விழாவில் சிறப்பாக செயல்பட்ட 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழாவில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும், 25-க்கும் மேற்பட்ட கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன அலுவலகப் பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com