search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து"

    • சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது
    • கதிரியக்க படங்களில் வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை

    தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன்.

    இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது.

    பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது. வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன. பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டது.

    சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கும் மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவரது வயிற்றில், சாப்பிடும் தட்டின் அளவிற்கு ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அப்பெண்ணிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்பொருள் வெளியில் எடுக்கப்பட்டது. அது, மருத்துவர்களால் அறுவை சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப்படும் அலெக்ஸிஸ் ரிட்ராக்டர் (Alexis retractor) என்பது தெரிய வந்துள்ளது.

    அறுவை சிகிச்சையில், அறுத்த தசைகளை தற்காலிகமாக விலக்கியே வைத்திருந்தால்தான் மருத்துவர்கள் கைகளாலும், உபகரணங்களை கொண்டும் சிகிச்சையை தொடர முடியும். இதற்காக பயன்படுத்தப்படும் ரிட்ராக்டர் எனப்படும் உபகரணம்தான் அப்பெண்ணின் வயிற்றில் இருந்துள்ளது.

    அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திய இதனை, மருத்துவர்கள் கவனக்குறைவாக அப்பெண்ணின் வயிற்றிலேயே வைத்து தையல் போட்டுள்ளனர்.

    கதிரியக்க ஊடுருவலை தடுக்கும் பொருளால் உருவாக்கப்பட்டதால், அந்த உபகரணம் எக்ஸ்-ரே பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

    "இது குறித்து மருத்துவமனையிலிருந்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கவில்லை. ஆக்லேண்டு மருத்துவமனையின் சுகாதார பராமரிப்பு, அடிப்படை தரத்திற்கும் கீழ்நிலையில் இருந்திருக்கிறது" என அந்நாட்டின் மருத்துவ துறையின் ஆணையர் இது குறித்து கூறினார்.

    அயல் நாடுகளில் மருத்துவ பராமரிப்பும், சுகாதார முறைகளும் உலகத்தரத்தில் விளங்குவதாக கருதும் போது, இது போன்ற செயல்கள் அங்கு நடப்பது வியப்பளிப்பதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
    • இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை மற்ற அணிகளுடன் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் அந்தந்த அணிகள் வீரர்களின் பலம், எந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்கள் பற்றி அணி நிர்வாகம் இறுதி முடிவை எடுக்கும். 

    அந்த வரிசையில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதையொட்டி இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.

    எனினும், உலக கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளையாட வைக்க வேண்டும் என்ற கருத்து பொதுப்படையாக நிலவி வந்தது. மேலும் அணி நிர்வாகமும், இதே போன்ற கருத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு உலக கோப்பை தொடர் முடியும் வரை இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் பிறகு, அவர் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்றும், இதனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:

    ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜான்னி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட் மற்றும் க்ரிஸ் வோக்ஸ்.

    • மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்.
    • ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரில் மூன்று சீன உணவகங்கள் உள்ளனர். இங்கு நேற்று இரவு ஏராளமானோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகத்துக்குள் சென்று வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய 24 வயது வாலிபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 163 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்றன. லீக் சுற்றுகளின் முடிவில் முத்ல் இரு இடம்பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 38 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மொகமது நவாஸ் 38 ரன்னும், மொகமது ரிஸ்வான் 34 ரன்னும் எடுத்தனர். ஹைதர் அலி அதிரடியாக ஆடி 31 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடர் கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது மொகமது நவாசுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கும் வழங்கப்பட்டது.

    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்று சாதனை படைத்துள்ளது. #UNGA #JacindaArdern
    நியூயார்க்:

    நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார். 

    நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் வாழ்ந்து வந்த ஜெசிந்தா, கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு அடுத்த படியாக பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற பெண் என்ற பெயரை ஜெசிகா பெற்றார்.

    இந்நிலையில், நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுக்கூட்டத்தில் ஜெசிகா தனது 3 மாத கைக்குழந்தை அட்ரென் கேபோர்ட் உடன் வந்து கலந்துகொண்டார். பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா சாதனை படைத்துள்ளார். அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது. 
    தனது பிரசவத்திற்காக நியூசிலாந்து பெண் மந்திரி ஜூலி அன்னே ஜென்டெர், 1 கி.மீ தூரம் தன்னுடைய மிதிவண்டியை தானே ஓடிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வெல்லிங்டன் :

    நியூசிலாந்து நாட்டில் இணை போக்குவரத்துத்துறை மந்திரியாக இருப்பவர் ஜூலி அன்னே ஜென்டர் (வயது 38). இவர், முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக, பிரசவகால விடுமுறையில் இருந்தார்.

    பிரசவத்திற்கான தேதி வந்தவுடன் மருத்துவமனையில் சேர்வதற்காக தனது வீட்டில் இருந்து ஆக்லாந்து என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

    வீட்டில் இருந்து சுமார் 1 கி. மீ தூரம் தன்னுடைய மிதிவண்டியை தானே ஓடிக்கொண்டு மருத்துவமனைக்கு பயணம் செய்துள்ளார். அப்போது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூலாக ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜென்டரின் மன தைரியத்தை பாராட்டி பல பெண்கள் அவரக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    ×