என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடத்தை சந்தேகம்"
வால்பாறை:
வால்பாறை அருகே உள்ள சோலையார்எஸ்டேட் இரண்டாவது பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி சித்ராதேவி(23).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. சித்ராதேவி சோலையார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். செல்லத்துரை சோலையார் எஸ்டேட் பள்ளிக்கூடத்தில் தற்காலிக இரவு காவலராக பணிபரிந்து வருகிறார்.
இந்த நிலையில் செல்லத்துரை சித்ராதேவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி திட்டிக் கொண்டிருந்ததால் மனமுடைந்து எஸ்டேட் குடியிருப்புக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சித்ராதேவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற வால்பாறை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சித்ராதேவியின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
திருப்பூர்:
கைதான மாணவர் பிரவீன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,
எனது தாயின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம்,பக்கத்தினரும் என்னிடம் கூறினர். இதனால் நான் அவரை எச்சரித்தேன். அதன் பிறகும் அவர் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் என்னை மிகவும் கேலி செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே சம்பவத்தன்று தாயை கயிற்றால் நெரித்து கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெரு மாநல்லூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி அமுதா(வயது37).
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது மூத்த மகன் பிரதாப்(20) அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசிக்கிறார். இளைய மகன் பிரவீன்(18) தாய் அமுதாவுடன் ஈட்டிவீரம்பாளையத்தில் வசித்து வந்தார். இவர் அரசு கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு அமுதா தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக கூறி பிரவீன் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அமுதா இறந்து விட்டதாக கூறி, உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர்.
ஆனால் பிரவீன் தாயின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் தனது உறவினர்களுக்கு தகவல் கூறி வரவழைத்தார். நேற்று இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடந்தது. அமுதா உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சு உதவியை நாடினர். அதன்பேரில் அங்கு சென்ற ஆம்புலன்சு குழுவினர் அமுதாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட அடையாளத்தை பார்த்து விசாரித்தனர். அமுதா தற்கொலை செய்துள்ளதால் போலீசில் புகார் செய்ய வேண்டும் என அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அமுதாவின் உறவினர்களிடம் விசாரித்தனர்.
சம்பவம் நடந்த போது பிரவீன் மட்டும் வீட்டில் இருந்ததால் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அமுதா எந்த இடத்தில் தூக்கு போட்டார்? கயிற்றை அறுத்து இறக்கி தனி ஆளாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றாயா? என போலீசார் கேட்டபோது பிரவீன் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அமுதாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்ததையும், கொலையை மறைக்க அமுதா தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தையும் பிரவீன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அருகே கோட்டூர் காளியம்மன கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு ஜெயந்தி மாலா (வயது 25) என்ற மகளும், செல்வக்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். ஜெயந்தி மாலாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை கருப்பையா வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இவரது தம்பி செல்வக்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
கணவரை பிரிந்து வாழ்ந்த ஜெயந்தி மாலா நடத்தையில் செல்வக்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் இது குறித்து வாக்குவாதம் நடத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜெயந்தி மாலாவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி மாலா பலியானார். இது குறித்து கோட்டூர் வி.ஏ.ஓ. தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கே.புதூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகிபாலன் (வயது 41). திருமணமான இவர் 2004-ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
அதன்பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சரளாதேவி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
சரளாதேவி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மகிபாலன் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரளாதேவி கத்தியால் மகிபாலனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்