search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடத்தை சந்தேகம்"

    பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், 2 பெண்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    சேலம்:

    கொளத்தூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி சசிகலா(வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது சசிகலாவின் உறவினர்கள் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தனர். அதில், கோட்டையூர் பகுதியை சேர்ந்த நல்லம்மாள்(58), பாப்பா(35) ஆகியோர் சசிகலாவின் நடத்தை குறித்து தகாத வார்த்தையால் பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். 

    அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக நல்லம்மாள், பாப்பா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நல்லம்மாள், பாப்பா ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
    கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டார். கணவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் அர்ச்சனா தேவி (வயது 19) என்பவருக்கும் ஆட்டோ சவாரியின் போது பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இருவரும் நெருங்கி பழகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.

    திருமணமான பின்பு அர்ச்சனா தேவி அடிக்கடி கரகாட்டம் ஆட சென்று வந்தார். இது சரவணனுக்கு பிடிக்கவில்லை.

    மேலும் அர்ச்சனா தேவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், மனைவியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்தார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

    தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.

    வீட்டின் கதவை பல முறை தட்டியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.


    அப்போது சரவணன் அங்கு அமர்ந்திருந்தார். கழிவறையில் அர்ச்சனா தேவியின் பிணம் கிடந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்தனர். இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கமுதி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

    கமுதி:

    கமுதி அருகேயுள்ள அபிராமம் நகரத்தார் குறிச்சியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகனும் உள்ளனர்.

    கடந்த சில மாதமாக செல்லப்பாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரால் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராக்கியின் நடத்தையில் செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராக்கியை அவதூறாக பேசினார்.

    இந்த நிலையில் ராக்கி இன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆவேசமாக வந்த செல்லப்பாண்டி சரமாரியாக ராக்கியை அரிவாளால் வெட்டினார்.

    இதைப்பார்த்த அவர்களது குழந்தைகள் அலறித்துடித்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து அபிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் அபிராமம் இன்ஸ் பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ் பெக்டர்கள் முருகன், சித்ராதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று ராக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பழனியம்மாள் (40).

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியம்மாளும், அவரது தாய் முத்தம்மாள் (60) என்பவரும் தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று இரவு பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளை மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.

    இது குறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடல்களை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் எனது மனைவியை உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் மறுத்து வந்தார். இதனால் அவருடன் நான் அடிக்கடி தகராறு செய்தேன். அப்போது என் மனைவியும், மாமியாரும் சேர்ந்து என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள்.

    என் மனைவி வேலை செய்யும் தோட்டத்தில் அவரை பார்க்க சென்ற போது அவர் அங்குள்ள வேறு ஒருவரிடம் சிரித்து பேசி பழகிக் கொண்டு இருந்தார். இதனால் வீட்டுக்கு வந்த என் மனைவியிடம் என்னுடன் இருக்க உனக்கு பிடிக்கவில்லையா? தோட்டத்தில் வேலை பார்க்கும் வேறு ஒருவருடன் சிரித்து பேசுகிறாய்? அவனுடன் உனக்கு தொடர்பு உள்ளதா? என சத்தம் போட்டேன். நேற்று இரவும் இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு வந்தது. பின்னர் என் மனைவி தூங்கச் சென்று விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் இருந்த நான் என் மனைவியை வெட்டிக் கொன்றேன். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டு இருந்த என் மாமியார் எழுந்து அதை தடுத்தார். அவரையும் வெட்டி கொன்றேன். 

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒரத்தநாடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் அரிசன காலனியை சேர்ந்தவர் விக்ரம் (வயது 35). விவசாயி. இவரது மனைவி விமலா (30). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    விமலா மன்னார்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவரது நடத்தையில் கணவர் விக்ரம் சந்தேகப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இரவு விமலா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கியது.

    இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விமலா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஒரத்த நாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் விமலாவின் கணவர் விக்ரம் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவர் விமலாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    மேட்டுப்பாளையம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள எடுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி ஜெனீபர் அகல்யா (வயது 26). கணவன்- மனைவி இருவரும் தென்னம் பாளையம் அவினாசி மார்க் கெட்டில் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சின்னராஜூக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சின்னராஜ் தனது மனைவியை மேட்டுப்பாளையம் பாரதி நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் அங்கு இருந்த கத்தியை எடுத்து ஜெனீபர் அகல்யாவின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கிழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜெனிபர் அகல்யாவை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெட்டப்பாக்கம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குழவி கல்லால் தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் காலனி புதுநகரை சேர்ந்தவர் ராஜ்கிரண் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். கஸ்தூரி திருவாண்டார் கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே கஸ்தூரியின் நடத்தையில் ராஜ்கிரண் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    அதுபோல் நேற்றும் இது தொடர்பாக அவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்கிரண் வீட்டில் இஞ்சி, பூண்டு இடிக்க பயன்படுத்தும் குழவி கல்லை எடுத்து கஸ்தூரியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு கஸ்தூரி மயங்கி விழுந்தார். உடனடியாக கஸ்தூரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமல்குமார் வழக்குபதிவு செய்து ராஜ்கிரனை கைது செய்தார்.
    திருச்சி அருகே இன்று மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் வடக்குஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36) . இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

    சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, பாலசந்தர் அவரது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். ஊருக்கு திரும்பியதும் அந்த பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் 2 மகன்களின் கல்விக்கு செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர், இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலசந்தர் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கொலை செய்தாரா? என்றும் பாலசந்தரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையைச் சேர்ந்தவர் பிச்சை முருகன் (வயது 49). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் துரைசாமிபுரம், வேப்பமரத் தெருவைச் சேர்ந்த பாக்கியலெட்சுமி (34). என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    பாக்கியலெட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிச்சை முருகன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பாக்கியலெட்சுமி கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    தாயை பார்ப்பதற்காக அவர்களின் மகள் பிரியதர்ஷினி அங்கு சென்றுள்ளார். இதனால் பிச்சை முருகன் ஆத்திரமடைந்து மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

    எனவே பாக்கியலெட்சுமி தனது மகளை பிச்சை முருகனிடம் ஒப்படைக்க சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தன்னை மீறி மகளை அழைத்துச் சென்றதாக பாக்கியலெட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாக்கியலெட்சுமியை சரமாரியாக பிச்சை முருகன் வெட்டியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த பாக்கியலெட்சுமி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சை முருகனை கைது செய்தனர்.

    விராலிமலை பஸ் நிலையத்தில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் போலீசில் சரண் அடைந்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொன்னகாட்டுபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    லதா விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். வேலுச்சாமி விராலிமலை பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் வெற்றிலை வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் லதாவின் நடத்தையில் வேலுச்சாமி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் பலமுறை அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.

    இன்று காலை லதா, விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். கடையில் வியாபாரத்தை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வேலுச்சாமி திடீரென லதாவிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.

    இதைப்பார்த்த பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


    இதற்கிடையே மனைவியை கொலை செய்த வேலுச்சாமி நேராக விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த லதாவின் தாய் கதறி அழுதார். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விராலிமலை பஸ் நிலையத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கி சித்ரவதை செய்த தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் நடத்தையில் வெங்கடேசன் சந்தேகம் அடைந்தார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு புவனேஸ்வரியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.

    அதுபோல நேற்று மதியம் வெங்கடேசன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தேங்காய் திருவியால் மனைவியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

    பழனி:

    பழனி தேரடி தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 48). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்பவருக்கும் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கண்ணகி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாகவே அர்ஜூணன் செல்வி (வயது 36) என்பவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்த்து வந்தார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அர்ஜூணன் தினசரி குடித்து விட்டு வந்து செல்வியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் செல்வி தனது மகனுடன் வேறு வீட்டில் வசித்து வந்தார். நேற்று தனியாக நடந்து சென்ற செல்வியை யாருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாய்? என கேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

    படுகாயமடைந்த அவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×