என் மலர்
நீங்கள் தேடியது "young girl murder"
மதுரை:
மதுரை அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சரவணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் அர்ச்சனா தேவி (வயது 19) என்பவருக்கும் ஆட்டோ சவாரியின் போது பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இருவரும் நெருங்கி பழகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.
திருமணமான பின்பு அர்ச்சனா தேவி அடிக்கடி கரகாட்டம் ஆட சென்று வந்தார். இது சரவணனுக்கு பிடிக்கவில்லை.
மேலும் அர்ச்சனா தேவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், மனைவியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.
தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.
வீட்டின் கதவை பல முறை தட்டியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது சரவணன் அங்கு அமர்ந்திருந்தார். கழிவறையில் அர்ச்சனா தேவியின் பிணம் கிடந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்தனர். இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை ரோட்டில் வசித்து வருபவர் அசோக் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ண வேணி (25). இவர்களுக்கு ஜெய்கணேஷ் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.
குடும்பத்தை வழிநடத்தி செல்ல கிருஷ்ணவேணியும் அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் நேற்றும் கிருஷ்ணவேணி கூலி வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், இரவு நேரமாகியும் கிருஷ்ணவேணி வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை கரிக்கலாம்பாக்கம்- பாகூர் ரோட்டில் உள்ள குளத்தின் அருகே கிருஷ்ண வேணி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அசோக்கரிக்க லாம்பாக்கம் புறக்காவல் நிலையத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது கிருஷ்ண வேணியின் 2 கைகளும் கட்டப்பட்டு கவிழ்ந்த நிலையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டனர். அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மேலும் கிருஷ்ண வேணி தலையில் சூடி இருந்த பூ வாடாமல் அப்படியே இருந்தது.
அதோடு பிணத்தின் அருகே ஒரு சாக்கு விரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணவேணியை யாராவது உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவரது கணவர் அசோக் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல் விவகாரத்தில் கிருஷ்ணவேணியை அவரது கணவரே கொன்று இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கிருஷ்ண வேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் காரணமாக கரிக்கலாம் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews






