search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl murder"

    கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டார். கணவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் அர்ச்சனா தேவி (வயது 19) என்பவருக்கும் ஆட்டோ சவாரியின் போது பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இருவரும் நெருங்கி பழகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.

    திருமணமான பின்பு அர்ச்சனா தேவி அடிக்கடி கரகாட்டம் ஆட சென்று வந்தார். இது சரவணனுக்கு பிடிக்கவில்லை.

    மேலும் அர்ச்சனா தேவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், மனைவியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்தார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

    தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.

    வீட்டின் கதவை பல முறை தட்டியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.


    அப்போது சரவணன் அங்கு அமர்ந்திருந்தார். கழிவறையில் அர்ச்சனா தேவியின் பிணம் கிடந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்தனர். இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போச்சம்பள்ளி அருகே வீட்டில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள வெப்பாளம் பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் பாண்டிச்சேரியில் சுவீட் மாஸ்டராக தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (வயது21). இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2 வயதில் மகன் உள்ளார்.

    இந்த நிலையில் விடுமுறைக்காக மணி சொந்த ஊருக்கு வந்ததாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு நடந்ததாக தெரிகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் கவுசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து கவுசல்யா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கவுசல்யா குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 4 வருடம் ஆனநிலையில் கவுசல்யா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. சரவணன் விசாரணை நடத்திய பிறகு தான் முழுவிபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    வில்லியனூர் அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பாகூர்:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை ரோட்டில் வசித்து வருபவர் அசோக் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ண வேணி (25). இவர்களுக்கு ஜெய்கணேஷ் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

    குடும்பத்தை வழிநடத்தி செல்ல கிருஷ்ணவேணியும் அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

    அதுபோல் நேற்றும் கிருஷ்ணவேணி கூலி வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், இரவு நேரமாகியும் கிருஷ்ணவேணி வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கரிக்கலாம்பாக்கம்- பாகூர் ரோட்டில் உள்ள குளத்தின் அருகே கிருஷ்ண வேணி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அசோக்கரிக்க லாம்பாக்கம் புறக்காவல் நிலையத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கிருஷ்ண வேணியின் 2 கைகளும் கட்டப்பட்டு கவிழ்ந்த நிலையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டனர். அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மேலும் கிருஷ்ண வேணி தலையில் சூடி இருந்த பூ வாடாமல் அப்படியே இருந்தது.

    அதோடு பிணத்தின் அருகே ஒரு சாக்கு விரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணவேணியை யாராவது உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவரது கணவர் அசோக் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கள்ளக்காதல் விவகாரத்தில் கிருஷ்ணவேணியை அவரது கணவரே கொன்று இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கிருஷ்ண வேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவம் காரணமாக கரிக்கலாம் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    கோவை செல்வபுரம் குளத்தில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொன்று வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை செல்வபுரம் செல்வாம்பதி குளத்தில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொன்று வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். நிர்வாண நிலையில் மிதந்த பெண்ணின் தலை, கைகள், வயிறு துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் தனித்தனியாக வீசப்பட்டு இருந்தது. கால்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

    கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சமீபத்தில் மாயமான இளம்பெண்களின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இளம்பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி வீசியிருப்பதால் இவ்வழக்கில் குறைந்தது 2-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அதற்குள் அரிசியை போட்டு குளத்தில் வீசி உள்ளனர். இதனால் 3 நாட்களுக்கு பிறகே உடல் வெளியே வந்துள்ளது. 

    நன்கு திட்டமிட்டு இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், இந்த கொலையில் கூலிப்படை கும்பல் ஈடுபட்டி ருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடித்தால், இவ்வழக்கில் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும் என்பதால்  அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக மாநகர துணை கமிஷனர் லட்சுமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×