search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் நிறுவனம்"

    • ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
    • மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக இந்த தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

    'எம்.எஸ்.எம்.இ' என்று அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். 25 சதவீத கூடுதல் மின்கட்டணத்தை குறைக்க கோரி வலியுறுத்தினார்கள்.

    இதனால் தமிழக அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 25 சதவீத கூடுதல் கட்டணத்தை 15 சதவீதமாக அரசு குறைத்தது. மீதி 10 சதவீதத்தை மின் வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கியது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உருவானது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டராக மாற்ற உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. அப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை தனியாக கணக்கிட்டு அதன்படி 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதன்படி இப்போது சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவன தொழிற்பேட்டைகளில், எலக்ட்ரானிக் மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக மார்ச் முதல் வாரம் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் உள்ள குறு-சிறு தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.

    அதேபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.

    அதன் அடிப்படையில் 25 சதவீதம் கட்டணம் கூடுதலாக கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதற்காக சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.

    • சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
    • சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாமல்லபுரத்தில் சுற்றுலா சார்ந்த தொழில்களான தங்குமிடம், உணவு, பயணம், சாகச பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, உள்ளிட்ட தொழில்களை தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் செய்து வருகிறது.

    இவை முறையாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் அனுமதி பெறாமல், உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பதிவு பெற்று அந்த அனுமதியுடன், செயல்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

    அதன்படி முறையாக சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் வரும் ஜூலை.31-ந் தேதிக்குள் சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட மாட்டாது
    • ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது.

    பெங்களூரு :

    விஜயாப்புராவில் நேற்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 11 மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பற்றி என்னுடைய கவனத்திற்கும் வந்தது. தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தவில்லை. கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த ஏப்ரல் மாதமே மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அது காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்திருந்தது.

    அந்த மின் கட்டண உயர்வு தான் தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒவ்வொரு ஆணடும் மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. தற்போது மட்டும் புதிதாக கட்டணத்தை உயர்த்தவில்லை. எனவே தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படாது. மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட மாட்டாது என்று முதல்-மந்திரி சித்தராமையாவும் தெரிவித்திருக்கிறார்.

    அதே நேரத்தில் மின் கட்டண உயர்வு காரணமாக தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளையும், பிற சலுகைகளையும் வழங்க அரசு முன் வரும். எனவே மின் கட்டணத்தை குறைக்கும்படி தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, அதுபற்றி தெரிந்து கொள்வது முக்கியமாகும்.அன்னபாக்ய திட்டத்திற்காக கர்நாடகத்தில் 2 லட்சம் டன் அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வது சரி இல்லை. முதலில் தங்களிடம் 7 லட்சம் டன் அரிசி இருப்பு இருப்பதாக கூறிவிட்டு, தற்போது கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. ஏழைகளுக்கு அரிசி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×