search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மண்டல கவுன்சில் கூட்டம்"

    • நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு மாநிலங்கள் கூட்டுத் தீர்வு காண வேண்டும்.
    • ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதி ஏற்படுத்த வேண்டும்.

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'இல்லந்தோறும் மூவண்ணக் கொடி' பிரச்சாரத்தில், நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து , தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை மற்றும் தேசபக்திக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி. நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 


    தென்னிந்தியா மீது பிரதமர் மோடிக்கு சிறப்பு அக்கரை உள்ளது, அதனால்தான் முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தென் மண்டல கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும். பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

    நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.  அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சி வருகிறது.

    ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்கு. இதற்காக தென் மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வங்கிகளின் கிளைகளை திறக்க வேண்டும். இது அரசு திட்டங்களின் பலன்கள் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும். கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன.
    • புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர், புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம், புதுச்சேரியின் நீர் தேவைக்காக இந்திராவதி- கிருஷ்ணா- பெண்ணை- காவிரி நதிகள் இணைப்பு மற்றும் கோதாவரி- வராகநதி- தென்பெண்ணை நதிகள் இணைப்பு, தமிழ்நாடு வழியாக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு வருதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

    • முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்தது.
    • மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடுதொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றே சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் சென்றார். அங்கு அவருக்கு கேரள மற்றும் குமரி மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு கேரள முதல்- மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழக - கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுவதாக கூறப்பட்டது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற 6 மாநில முதல்-மந்திரிகள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு மாநிலங்களுக்கு நிதிசுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகைக்கான கால அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். வெள்ள பாதிப்பு உள்ளிட்ட மாநில அரசுகளின் தேவைகளுக்கான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

    புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சீர்திருத்த சட்டத்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    மேலும் அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.

    தென்மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாதையில் பயணிப்போம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக-கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
    • முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்தது.

    தென்மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார். இதற்காக அவர் நேற்று மாலையே கேரளா வந்தார்.

    இன்று காலை 11 மணியளவில் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 6 மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை, எல்லை பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    அமித்ஷா தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றே சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் சென்றார். அங்கு அவருக்கு கேரள மற்றும் குமரி மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழக-கேரள நதிநீர் பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று நடைபெற்று வரும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின்பு கேரளா மற்றும் கர்நாடகா அணை நீரை பயன்படுத்தும் பிற மாநிலங்களின் முதல் மந்திரிகளும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

    தென்மண்டல கவுன்சில் கூட்டம் முடிவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

    • திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 2-ந்தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

    சென்னை:

    திருவனந்தபுரத்தில் வருகிற 3-ந்தேதி 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள். மேலும் லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த மாநாட்டில் அண்டை மாநிலங்களுக்கிடையே நடக்க கூடிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

    குறிப்பாக முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் அந்த கூட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடிய நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவார் என தெரிகிறது.

    இதற்காக திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து 2-ந்தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அன்றைய தினம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தனியாக சந்தித்து பேசுகிறார். இரவு திருவனந்தபுரத்தில் தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

    ×