search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குப்போட்டு"

    • பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வடமாநில தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சில்பி தேவி என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மகேஷ். இவரது கோழிப்பண்ணையில் பீகார் மாநிலம் செரியானா தாலுகாவைச் சேர்ந்த டுன்டுன்குமார் (வயது 20) என்பவர் கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், சில்பி தேவி என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சில்பிதேவியை ஊரிலேயே விட்டு விட்டு டுன்டுன்குமார் மட்டும் தனியாக வேலைபார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணை அருகே உள்ள வேப்பமரத்தில் டுன்டுன்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக அப்பகுதியில் மாடு மேய்க்க வந்தவர்கள் பரமத்தி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இறந்த டுன்டுன்குமார், கடந்த 27-ம் தேதி இரவு தனது மனைவியுடன் செல்போனில் பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு அருகே வாங்கி கடனை செலுத்தமுடியாததால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர், ராம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி கனகசுந்தரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சரவணன் தனிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சரவணனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு குடல் இறக்கம் ஏற்பட்டு மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் சரவணனுக்கு சரிவர வேலை இல்லாததால் கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    மேலும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று மனைவியிடம் கூறி வந்துள்ளார். சரவணை அவரது மனைவியை சமாதானப்படுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு கொண்டார். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவரது மகள் வீட்டிற்கு வந்த போது தந்தை தூக்கு போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே இது குறித்து அக்கம்பக்கத்தில் தகவல் தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த முடுக்கன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி (27). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜீவ்காந்தி எரங்கா ட்டூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி சென்று மனைவியை பார்த்து வந்தார்.

    பின்னர் எரங்காட்டூரில் ராஜீவ்காந்தி தங்கியிருந்த வீட்டு நீண்ட நேரமாக கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பெண் வக்கீல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததால் பெண் வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வளையபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 40) .இவரது மனைவி நித்யா (35) இவர்களுக்கு கடந்த 2014 டிசம்பரில் திருமணமாகி டேனிஸ் (7) தயானி (4) என 2 குழந்தைகள் உள்ளனர்.

    இருவரும் மோகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.கணவன் மனைவி இருவரும் வக்கீல்களாக உள்ளார்கள்.இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த நித்யா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் சேர்ந்த ராஜேஸ்வரி (66) மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேப்பூர் அருகே மகனுக்கு பெண் கிடைக்காததால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக தனது மகனின் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மகனுக்கு 30 வயதாகியும் திருமணத்திற்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செல்லியம்பாளையம் கிராமம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவரது மனைவி நாச்சியம்மை,( வயது52). இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகனின் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மகனுக்கு 30 வயதாகியும் திருமணத்திற்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நாச்சியம்மை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டின் முதல் தளத்தின் மேற்கூரையில் தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவர் வள்ளியப்பன் வேப்பூர் பஸ் நிலையம் அருகேயுள்ள தனது மெடிக்கலில் இருந்தவர் தனது மனைவிக்கு பலமுறை போன் செய்தும் அவர் போன் எடுக்காததால், வீட்டிற்கு வந்த வள்ளியப்பன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    ×